04 ஆம் பகுதி
அரச உத்தியோகத்தர்களின் லீவு
தாபான விதிக்கோவை அத்தியாயம் XII
லீவு தொடர்பான பதிவின் முதலாது பகுதியை கீழ்வரும் லிங்கில்வாசிக்கலாம்.
இரண்டாம் பகுதி
19. பிரசவ லீவு
- நிரந்தர, தற்காலிக, அமைய அல்லது பயிலுனர் என்ற எந்த வகையான நியமனம் பெற்றவர்களும் உரித்துடையதாகும்.
- சம்பளத்துடனான பிரசவ விடுமுறை
- அனைத்து குழந்தைப் பிரசவங்களுக்கும் உரித்துடையதாகும்.
- லீவு 84 தினங்களுக்கு பெறலாம்.
- பிரசவம் நிகழ்ந்து 4 வாரங்களாகும்வரை உத்தியோகத்தரை கடமைக்கு வருவதற்கு இடமளிக்கப்படுவதில்லை
- இந்த லீவு பெறுவதற்காக வைத்திய அறிக்கை அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்அவசியமாகும்.
- சனி ஞாயிறு அரச விடுமுறைகள் தவிர்ந்த அடிப்படையில் வேலை நாட்கள் மாத்திரம் கணக்கிடப்படும்.
- இது பூரணமாக வழங்கப்படுகின்ற விசேடமான லீவாகும்.இது மற்றைய லீவுகளிலிருந்து கழிக்கப்படுவதில்லை
- பிறக்கும் போது குழந்தை மரணித்தாலோ அல்லது குழந்தை பிறந்து 6 வாரங்களுக்குள் குழந்தை மரணித்தாலோ, குழந்தை பிறந்த நாள் முதல் 6 வாரங்கள் விடுமுறை உரித்தாகின்றது.
- அரைச் சம்பள லீவு
- மேற்படி 84 நாள் லீவு முடியும் போது பெறலாம்.
- இந்த லீவும் 84 நாட்கள் வழங்கப்படும்.
- சனி ஞாயிறு அரச விடுமுறைகள் சேர்த்தே கணக்கிடப்படும்
- சம்பளமற்ற பிரசவ லீவு
- மேற்படி 84 நாள் லீவு முடியும் போது பெறலாம்.
- இந்த லீவும் 84 நாட்கள் வழங்கப்படும்.
- சனி ஞாயிறு அரச விடுமுறைகள் சேர்த்தே கணக்கிடப்படும்
- கடன் ஏதும் இருப்பின் அவைகளை அறவிடுவதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
- கருச் சிதைவு ஏற்படும் போது
- வைத்திய அறிக்கையில் குறிப்படுகின்ற அளவான லீவினை உத்தியோகத்தரின் ஓய்வு லீவுகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
- தாய்ப்பால் ஊட்டுவதற்காக வேலை முடியும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக செல்லல்
- அரைச் சம்பள பிரசவ லீவு பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு இந்த சலுகையினைப் பெறலாம். குழந்தைக்கு 6 மாதமாகும்வரையில் மாத்திரமே இந்த லீவு வழங்கப்படும்.
- கர்ப்பம் தரித்து 5 மாதம் பூர்த்தியானதும் அரை மணிநேரம் தாமதமாகி வருவதற்கும் அரை மணி நேரம் முன்னதாக செல்வதற்கும் அனுமதி வழங்கலாம்.
- அரைச் சம்பளம் அல்லது சம்பளமற்ற பிரசவ லீவு காலத்தில் குழந்தை மரணிக்குமாயின் அதிலிருந்து 7 நாட்களில் லீவு செல்லுபடியற்றதாகிவிடும்.
- சம்பள ஏற்றம், பதவி உயர்வு, ஓய்வுதியக் கணிப்பு என்பவற்றுக்கு இந்தலீவு பதிப்பினை ஏற்படுத்தாது.
- அவசியப்படுமிடத்து லீவினை இரத்துச் செய்து விட்டு சேவைக்கு செல்ல முடியம்.
- தந்தயைாருக்கான லீவு
- மனைவிக்கு குழந்தை ஒன்று பிறந்ததற்காக இந்த லீவு பெறலாம்.
- 03 தினங்கள் வழங்கப்படும்.
- குழந்தைபிறந்த தினத்திலிருந்து 3 மாதங்களுக்குள் பெற வேண்டும்.
- திருமணச் சான்றிதழ், குழந்தை பிறப்பு தொடர்பான வைத்திய சான்றிதழ், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் என்பவற்றை சமர்ப்பித்து இந்த விசேட லீவினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
19. அரச பரீட்சைகளில் பங்குபற்றுவற்கான லீவு
- வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைக்காக உரித்தாகும்
- முதலாவது முறையாக முகம் கொடுப்பதற்கு மாத்திரம் வழங்கப்படும்.
- பிரயான கொடுப்பனவு மற்றும் வேறு கொடுப்பனவுகள் இதற்கு இல்லை
- ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறாக முகம் கொடுப்பதாயின் முதல்தடவை மாத்திரம் பெறலாம்.
- ஏனைய அரசகரு மொழித் தேரச்சியைப் பெறுவதற்கான பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்காக ( அ.நி.சு. 2/2016)
- முதலாவது முறை மாத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.
- அரச கருமமொழிகள் திணைக்களம் / இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் என்பவற்றினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்காக மாத்திரம். வழங்கப்படும்.
20. கட்டாய லீவு.
- உத்தியோகத்தர் தனது கடமைகளை மேற்கொள்வது பொது நலனுக்காக அல்ல என்பதாகக் கருதப்படும் போது கட்டாய லீவு வழங்கப்படலாம்.
- வைத்திய காரணங்கள் அல்லது விசேட (ஒழுக்காற்று) காரணங்கள்
- நியமன அதிகாரியே இந்த லீவினை வழங்குவார்.
- ஆரம்பமாக சேமித்துள்ள லீவுகளில் இருந்து கழிக்கப்படும்.
- அதன் பின்னர் சம்பளமற்ற லீவாக கணிக்கப்படும்.
21.அரைச் சம்பள லீவு .
- உத்தியோகத்தர் ஒருவரது ஓய்வு லீவுகள் முடிந்ததன் பின்னர் சுகயீனங்களுக்காக இந்த லீவினைப் பெறலாம்.
- இங்கு ஓய்வு லீவுகள் எனப்படுவது நடப்பு வருடத்தின் ஓய்வு லீவுகள், கடந்த வருடத்தில் மீதப்படுத்தியுள்ள ஓய்வு லீவுகள், முன்னைய லீவுகள் என்பவற்றைத் குறித்தும்
- அரைச்சம்பள லீவு பெறமுடியுமான உச்ச கால அளவு சேவைக் காலத்தின் 1/6 பகுதியாகும்
- தொடராக 12 மாதங்களுக்கு மேல் வழங்கமுடியாது
- பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவர் வௌிநாட்டில் லீவினை கழிக்க முட்படும்போது
- அவருக்கான ஏனைய லீவுகள் முடிந்த பின்னர் எடுக்கலாம்.
- மொத்த அரைச் சம்பள லீவினையும் அல்லது அதன் ஒரு பகுதியை சம்பளமற்ற லீவாக்குவதற்கு லீவு வழங்கும் அதிகாரம் பெற்றவருக்கு அதிகாரமுண்டு.
- கீழ்வருகின்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கையில் லீவினைக் கழப்பதற்கு வழங்க முடியும் (பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு)
- அரைச் சம்பள லீவு 3 மாதங்களுக்கு அதிகரிக்கலாகாது.
- நடப்பு வருடம் மற்றும் அதற்கு முன்னைய இரண்டு வருடங்களின் ஓய்வுலீவுகள் முடிந்திருக்கவேண்டும்.
- லீவில் இருக்கும் போது உத்தியோகத்தர் ஓய்வு பெற்றாலோ அல்லது சேவையிலிருந்து நீங்கினாலோ கடைசியாக பணியாற்றிய தினத்திலிருந்து பெற்ற சம்பளத்தினை மீளவழங்க வேண்டும்.
- பதவி நிலையல்லாத உப நிலைகளில் உள்ள உத்தியோகத்தர் ஒருவருக்கு மருத்துவச் சான்றிதழில் அடிப்படையில் இலங்கையில் கழிப்பதற்கு இந்த லீவினைப் பெறலாம்.
- சம்பளத்திற்கு மேலதிகமாக கொடுப்பனவுகள் பெறும் போது அதிலும் அரைப்பகுதியினைப் பெற்றுக்கொள்ளலாம்.
- ஒரு வருடத்தில் ஆரம்பித்து அடுத்த வருடத்திற்கு தொடருக்கின்ற லீவுகள் இடையீ டிலா லீவாகக் கருதப்பட்டு முழுக் காலத்திற்கும் அரைச் சம்பளமாக கருதப்படல் வேண்டும்.
- அரைச் சம்பள லீவுக்குப் பிறகு பூரண சம்பளத்துடனான லீவு பெற முடியாது.
- முழுச் சம்பளத்துடனான லீவுக்குப் பின்னர் அரைச் சம்பள லீவு பெறலாம்.
- அரைச் சம்ள லீவுக்குரிய காலப்பகுதியின் அரைவாசியே சேவைக்காலமாக கணக்கிலெடுக்கப்டும்.
- அரைச் சம்பள லீவில் சனி, ஞாயிறு, அரச விடுமுறைகள் என்பன உள்ளடக்கப்டும்
இந்தப் பகுதி தொடர்பான வினாக்கள் இருப்பின் கீமே கொமன்ட்டில் குறிப்பிடவும்.
இந்தக் விபரங்கள் lankajobinfo,com இணையத்தளத்தினால் தொகுத்து வழங்கப்பட்டதாகும்.