இரண்டாம் பகுதி
அரச உத்தியோகத்தர்களின் லீவு
தாபான விதிக்கோவை அத்தியாயம் XII
லீவு தொடர்பான பதிவின் முதலாது பகுதியை கீழ்வரும் லிங்கில்வாசிக்கலாம்.
12. விசேட லீவு
- முஸ்லிம் அரச ஊழியர்களுக்காக அவர்களது மதக் கிரியைகளை நிரைவேற்றுவதற்காக.
- வௌ்ளிக்கிழமைகளில் 12.00 மணி முதல் 2 மணித்தியாலய லீவு வழங்கப்படுகின்றது.
- அவசியப்படுமிடத்து இந்த 2 மணி நேர லீவுக்காக கடமைக்கான நேரம் தவிர்ந்த நேரங்களில் சேவையாற்றவேண்டும்.
- சேவையின் அவசியப்பாடு கருதி இந்த லீவினை வழங்காமல் இருக்கலாம் ( அ.நி.சு 21/2016)
- அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் நடைபெறுகின்ற வகுப்புகளில் பங்குபற்றுவதற்கான அனுமதி
- ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலயத்திற்கும் அதிகரிக்கலாகாது.
- 9.30 மணிக்கு முன்னர் ஆரம்பிக்கவேண்டும் அல்லது 3.15 இன் பின்னர் ஆரம்பாமாக வேண்டும்.
- கடமைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படலாகாது
- அதிக அளவானவர்கள் ஒரே நேரத்தில் லீவு பெற்றுக்கொள்ள முடியாது
- அவசியப்படுமிடத்து இந்த லீவுக்காக கடமைக்கான நேரம் தவிர்ந்த நேரங்களில் சேவையாற்றவேண்டும்.
- பதவி உயர்வுக்கான பாடம் ஒன்றுக்காக தொழிற்சங்கம் ஒன்று அல்லது அரச சேவையாளர்களின் ஒன்றியம் ஒன்று என்பன ஏற்பாடு செய்கின்ற வகுப்பு ஒன்றில் பங்குபற்றுவதற்காக மேற்படி வாய்ப்பிற்கான சலுகைகளை அதிகரிப்பதற்கான அதிகாரம் திணைக்களத் தலைவருக்ககு காணப்படுகின்றது
- தேர்தல் ஒன்றில் வாக்களிப்பதறக்காக (ஆகக் குறைந்த கால அளவு)
- ஜனாதிபதி தேர்தலுக்காக 4 மணித்தியாலயம்
- பாராளுமன்றத் தேர்தலுக்காக 4 மணித்தியாலயம்
- மக்கள் கருத்துக்கணிப்புக்காக 4 மணித்தியாலயம்
- மாகாணசபைத் தேர்தலுக்காக 2 மணித்தியாலயம்
- அரசாங்க அங்கீகாரம் பெற்ற விஞ்ஞான அல்லது தொழில்சார் சங்கமொன்றினால் அல்லது நிறுவனமொன்றினால் சர்வதேச மாநாடு ஒன்று நடாத்தப்படும் போது அதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு
- செல்வதற்கான அனுமதியினை அரசு வழங்கவேண்டும்
- முழுச் சம்பளத்துடனான லீவுவழங்கப்படும்
- “அரசாங்கம் அங்கீகரித்த” விஞ்ஞான அல்லது தொழில்சார் சங்கம் என்பதன் பொருள் அரசாங்கத்திடமிருந்து வருடாந்தம் உதவித் தொகையினைப் பெற்றுக்கொள்கின்ற நிறுவனங்கள் அல்லது சங்கங்கள் என்பதாகும்.
- மாநாடு நடைபெறுகின்ற காலம் மற்றும் பயணத்துக்காக செலவாகின்ற ஆகக் குறைந்த காலம் என்பன லீவாக வழங்கப்படும்
- அமைச்சின் செயலாளர் அனுமதிப்பார்.
- விளையாட்டுக்களில் அல்லது விளையாட்டுக்களுடன் தொடர்புடைய ஏனைய பணிகளில் ஈடுபடுகின்ற அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு
- கீழ்க்குறிப்பிடப்படும் சந்தர்ப்பங்களில் சம்பளத்துடனான விசேட லீவு வழங்கப்படும்.
- இலங்கை அணியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற விளையாட்டு வீரராயிருத்தல்
- தேசிய விளையாட்டு அணியொன்றின் உத்தியோகத்தர் ஒருவராக இருத்தல்
- சர்வதேசப் போட்டி ஒன்றில் கலந்துகொள்வதற்கு பயிற்சி முகாமொன்றில் பங்குபற்றுவதற்காக
- விளையாட்டு அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட பயிற்சியளித்தல் , நடுவர்களாகப் பணியாற்றுதல் தொடர்பான சர்வதேச மாநாடு/ பாடநெறியில் பங்கு பற்றுவதற்காக
- திணைக்களத் தலைவரினால் லீவு அனுமதிக்கப்படும்
- கீழ் குறிப்பிடும் சந்தர்ப்பங்களிலும் மேற்குறிப்பிட்ட சலுகை கிடைக்கப்பெறும்
- தேசிய விளையாட்டு வீரர் ஒருவராக விளையாட்டுத அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒருவர் பயிற்சி முகாமொன்றில் கலந்து கொள்வதற்காக
- இலங்கை அரச சேவைகள் விளையாட்டுச் சங்கம் ஒன்றினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற உள்நாட்டு போட்டியொன்றில் கலந்து கொள்வதற்காக
- மேற்படி போட்டியில் நடுவராக கலந்துகொள்வதற்காக
- தொழிற்சங்க உறுப்பினர் ஒருவர் XXV ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய.
- சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு XXIIIஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய.
- தனிப்படுத்தலுக்கான நோய்களினால் பீடிக்கப்படுமாயின் XXV ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய
- சில சங்கங்கள் மற்றும் நிறுவனங்களினால் நாடாத்தப்படுகின்ற வருடாந்த மாநாட்டுக்காக (அ.நி.சு 7/2014)
- சம்பளத்துடனான லீவு வழங்கப்படும்
- புகையிரத ஆணைச்சீட்டு வழங்கப்படும். (இது தங்களுக்கு உரிய புகையிரத ஆணைச்சீட்டுகளுக்கு மேலதிகமாக வழங்கப்படும்)
- நோய் தொற்றுக் காப்புக்கான சத்திர சிகிச்சை ஒன்றிற்கு உட்படுத்தப்படுகின்ற அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு
- (ரியுபெக்டமிக்காக) பெண் ஒருவருக்கு 7 நாட்கள் லீவு
- (வாசெக்டமிக்காக) ஆண் ஒருவருக்கு 3 நாட்கள்
- இத்தாஃ லீவு
- முஸ்லிம் பெண்களுக்கு இது உரித்தாகும்
- சேவைக்காலத்தில் உள்ள பயன்படுத்தான ஓய்வு/பிணி லீவுகளை மாற்றீடு செய்யலாம்
- கணவன் மரணித்தால் 4 மாதங்கள் 10 நாட்கள் லீவு உரித்தாகும்
- விவாகரத்துப் பெற்றால் 03 மாதங்கள்
- இந்த நாட்களின் அளவுஅதிகரிக்கும் போது அரைச் சம்பள லீவாக கணிக்கப்படும்
- சேவா வனிதா உறுப்பினர் ஒருவரான அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு
- சேவாவனிதா கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக மாதம் ஒன்றிற்கு ஒரு மணித்தியாலய லீவினை வழங்குதல் வேண்டும..
- லீவில் இருக்கின்ற ஒருவர் யுத்த நிலவரம் காரணமாக மீண்டும் சேவைக்கு வர முடியாமல் போகுமிடத்து
- விசேட லீவு வழங்கப்படும்
- இதற்காக மாவட்டச் செயலாளரிடம் உறுதிச் சான்றிதழ் பெற வேண்டும்
- ஏதேனும் சந்தேகமிருந்தால் பாதுகாப்புப் பிரிவின் செயலாளரிடம் வினவப்படும்
- சேவை நிறுத்தத்திற்கு உட்படாத அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவர் தனக்கு எதிராக நடாத்தப்படும் ஒழுக்காற்று விசாரணையில் முன்னிற்பதற்காக
- விசேட லீவுவழங்கப்படும்
- இந்தவிசாரணை முடிவில் குற்றவாளியாக்கப்படுமிடத்து அவரது வருடத்தின் லீவிலிருந்து கழிக்கப்படும்.
13. கடமை லீவு
- மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளல், பொருட் கொள்வனவு அல்லது வழங்கல் தொடர்பான கலந்துரையாடல், பொருட்கள் மற்றும் உபகரணங்களைப் பரீட்சித்தல், ஒப்பந்தங்களில் கைச்சாத்திடல் போன்ற
- அரச நடவடிக்கைகளுக்காக அரசு மூலமாக வௌிநாடு அனுப்பப்படல்
- கடமைக்கான காலம் மற்றும் பயணத்திற்கான காலமும் லீவாக வழங்கப்படும்
- இலங்கை இராணுவத்தில் அல்லது கடற் படையில் அல்லது விமானப் படையில் அல்லது தொண்டர் படையில் பணியாற்றுகின்ற அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு
- பணிக்காக அழைக்கப்படும் போது
- வருடாந்த பியற்சி முகாம்களுக்காக அழைக்கப்படும் போது
- வார இறுதி முகாம்கள்/ யுத்த பயிற்சியல் பங்கு கொள்வதற்கு கடமை லீவு வழங்கப்படும்
- விசேட பொலிஸ் சேவையில் இருக்கும் ஒரு அலுவளர்
- கடமைக்கு அழைக்கப்படும் போது
- பயிற்சி முகாம் ஒன்றிற்கு செல்வதற்காக கடமை லீவு வழங்கப்படும்.
- ஒழுக்காற்றுவிசாரணை ஒன்றின் போது
- குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக முன்னிற்கும்போது
- குறித்த விசாரணைக்கு செல்வதற்காக
- குறித்த ஆவணங்களைப் பரிசோதிப்பதற்காக கடமை லீவு வழங்க்படும்
- ஒழுக்காற்று விசாரணையின் போது திணைக்களத் தலைவர் ஊடாக அழைக்கப்படுகின்ற சாட்சி ஒருவருக்கு கடமை லீவு வழங்கப்படும்
- நியதிச்சட்ட சபையொன்றின்/ கூட்டுத்தாபனமொன்றின் சட்ட திடடங்களின் கீழ் நடாத்தப்படுகின்ற ஒழுக்காற்று விசாரணை ஒன்றின்போது கடமை லீவு வழங்கப்படும்.
- நிறுவனத் தலைவர் ஊடாக கோரிக்கை விடுக்க வேண்டும்.
- நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்படுகின்ற விடயங்களுக்கு வரையறுக்கப்படுகின்றது.
- நீதிமன்றம் செலவதற்காக கடமை லீவு வழங்கல்
- உத்தியோகப் பதிவியின் ஊடாக நீதிமன்றம் அழைக்கப்படல்
- கடமையின் தன்மையைப் பொறுத்து நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்படும் போது
- அரச சாட்சி ஒருவராக முன்னிற்கும் போது
- தொழிற்சங்க உருப்பினர் ஒருவராக தொழிற்சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அலலது குறித்த மாநாடு தனது திணைக்களத்தின் பணிகளுக்கு உரியது எனும் போது கடமை லீவு பெறலாம்
- பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத வைத்தியரான அரச சேவையாளர்
- அவசரமாக நோயாளர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும் போது
- மாதம் ஒன்றிற்று 3 நாட்களிலும் அதிகரிக்காத அடிப்படையில் கடமை லீவு வழங்கப்படும்.
14. முழுச் சம்பளத்துடனான கற்கை லீவு
- கற்கைக்காக அல்லது பயிற்சிக்கான காலத்துக்கும் அதற்காக பயணிப்பதற்கான காலத்துக்கும் லீவினைப் பெற்றுக்கொள்ளலாம்.
- கீழ்வரும் சந்தர்ப்பங்களில் முழுச்சம்பத்துடனான உள்நாட்டு/வௌிநாட்டு கற்கை லீவு பெறலாம்
- உரிய தகைமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அனுமதிக்கப்பட்ட அரசாங்கச் செலவிலான திணைக்களப் பயிற்சி முறைமையொன்றிற்கு /புலமைப் பரிசில் முறைமையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில்,
- அரசாங்க வேண்டுகோளின் பேரில் புலமைப்பரிசிலுக்கு இணைத்து்ககொள்ளப்படல்
- தனது பதவியுடன தெடார்புடையதும் ஆட்ச்சேர்ப்பு/ பதவியுயர்வு பிரமாணக் குறிப்பின் பிரகாரம் கற்கை/ பயிற்சி பாடநெறி ஒன்றிற்காக அரசாங்கத்தின்/ வெளிநாட்டு அரசாங்கமொன்றின் / முகவர் நிறுவனமொன்றின் செலவில் வெளிநாடு செல்லல்
- திணைக்கள பயிற்சி வேலைத் திட்டம் ஒன்றினுள் உள்ளடக்கப்பட்டுள்ளதும், அவரது தொழில்சார் காலப் பகுதியினுள் கற்பதற்காக வழமையாக அரசாங்க செலவில் அவர் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட வேண்டி இருக்கின்றதுமான, கற்கை /பயிற்சி பாடநெறி ஒன்றிற்காக வெளிநாட்டு முகவர் நிறுவனமொன்றினால்/ வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றினால் வழங்கப்படுகின்ற புலமைப் பரிசில் ஒன்று அலுவலரின் முயற்சியினால் பெற்றுக்கொள்ளப்படும் போது.
- வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றினால் அல்லது முகவர் நிறுவனம் ஒன்றினால் நடாத்தப்படுகின்ற செயலமர்வொன்றில், பயிற்சி நெறியொன்றில், தொழில்நுட்பப் பயிற்சி நெறியொன்றில், தொழில்சார் ஆலோசனைப் பாடநெறியொன்றில், கல்விச் சுற்றுலாவொன்றில் கலந்து கொள்வதற்காக (குறித்த அழைப்பு அரசிற்கு ஊடாக குறித்த அலுவளரின் பெயர் குறிப்பிட்டுஅனுப்பப்பட்டிருக்கவேண்டும்.
- தற்காலிக ஊமியர் ஒருவர் சம்பளத்துடனான கற்கை லீவு பெறுவதற்கான உரிமை அற்றவதாவார்.
- தகுதிகாண் காலப்பகுதியில் உள்ள அலுவளர் ஒருவர் கீழ் குறிப்பிடும் சந்தர்ப்பங்களில் பெறலாம்
- தனது சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு அமைய கற்கைநெறி ஒன்றைக் கற்பதற்காக உள்நாட்டு அல்லது வௌிநாட்டு அரசுகளின் செலவில் வௌிநாடு செல்லல்
- குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதிமேதகு ஜனாதிபதி/ கௌரவ பிரதமர்/ கொளரவ ஆளுனர் களின் அனுமதியினைப் பெற்றிருத்தல்.
இந்த லீவினைப் பெற முன்னர் உரிய முறையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.. (XV ஆம் அத்தியாத்தின் 4 ஆம் பிரிவு)
XV ஆம் அத்தியாத்தின் 10 ஆம் பிரிவின் கீழ்அலுவளருக்கு உரிய அனுமதி கிடைத்திருக்கவேண்டும்.
முழுச்சம்பளத்துடனான உள்நாட்டு கற்கை லீவுகளுக்களுக்காக கட்டாயசேவைக் காலம் ஒன்றிற்காக மீண்டும் வந்து சேவையாற்ற வேண்டும்.
- 6 மாதங்களுக்கு குறைந்த காலமாயின் - கட்டாயசேவைக்காலம் இல்லை
- 6 மாதங்களுக்கு அதிகரிக்குமாயின் - ஆகக் கூடிய காலம் 5 வருடங்கள் என்ற அடிப்படையில் பெறுகின்ற லீவுக்கான காலத்தின் இரண்டு மடங்கு சேவையாற்ற வேண்டும்.
கட்டாய சேவைக்காலம் கிட்டிய மாதங்களில் கணக்கிடப்படவேண்டும்.
தனது பதவியுடன் தொடர்புடையதும் ஆட்ச்சேர்ப்பு/ பதவியுயர்வு பிரமாணக் குறிப்பின் பிரகாரம் பட்டப்பின்படிப்பு அல்வது உயர்பட்டம் ஒன்றினை பெறவேண்டி இருந்து கற்கை லீவு பெறாதவிடத்து
- அவ்வப்போது வேலை நாட்கள் 10 என்ற உச்ச அளவுக்கு அமைய சம்பளத்துடனான கற்கை லீவு பெறலாம்.
- இது ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும்.
- பரீட்சைக்கு முகம்கொடுக்காமை அல்லது பரீட்சையில் சித்தியடையாமையினை காரணமாகக் காட்டி மீண்டும் லீவு கோர முடியாது.
- ஆசிரியர்கள் இந்த லீவினைப் பெற்றுக் கொள்ளலாம். (அ.நி.சு 23/2014)
இந்தக் விபரங்கள் lankajobinfo,com இணையத்தளத்தினால் தொகுத்து வழங்கப்பட்டதாகும்.