தற்போது நாட்டின் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளல் என்ற தலைப்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் மாகாண கல்வி அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு 2021.09.26 ஆம் திகதி சுற்றுநிருபம் ஒன்றுஅனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.
அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்படிருக்கின்ற விடயங்கள் வருமாறு
01. நாட்டில் காணப்படுகின்ற தேசியப் பாடசாலைகள் மற்றும் மாகாணப்பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்காக பயிலுனர் பட்டாதிகளை சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் 2021.04.19 ஆம் திகதி அமைச்சரவையில் தீரம்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன் அது தொடர்பில் 2021.06.30 ஆம் திகதி கல்வி அமைச்சின் செயலாளரினால் மாகாண கல்வி அமைச்சுகளின் செயலாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
02. நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரையில் நியமனக் கடிதம் வழங்கப்படாத அனைத்து நியமனங்களையும் பிற்போடுவதற்கு அமைச்சரவை தீர்மானம் 2021.08.30 ஆம் திகதி மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
03. பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குகின்ற நடவடிக்கைகள் பூர்த்தியாகும் வரையில் மாகாண சபைகளில் நிலவுகின்ற அனைத்து வெற்றிடங்களுக்குமான நியமனங்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அனைத்து மகாண ஆளுநர்களுக்கும் வேண்டுகோள் விடுக்குமாறு ஜனாதிபதி செயலாளருக்கு அறிவிப்பதற்கு 2021.09.13 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
04. மேலும் 2021.09.16 ஆம் திகதி ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது அனைத்து மகாணங்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற ஆசிரியர் நியமனங்களையும் இடைநிறுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு வாய்மூலமான அறிவித்தல் வழங்கப்பட்டிருக்கின்றது
05. மேற்படி அனைத்து விடயங்களையும் கருத்தில்கொண்டு தங்களது மாகாணங்களில் நிலவுகின்ற ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கான நியமனம் வழங்குகின்ற நடவடிக்கைகளை இடைநிறுத்தி பயிலுனர் பட்டதாரிகளுக்காக நிரந்தர நியமனம் வழங்குகின்ற செயற்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன் என்பதாக அந்த சுற்றுநிருபத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
அதன் அடிப்படையில் தென்மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2021.10.01 ஆம் திகதி விண்ணப்பம் கோரப்பட்டு 2021.10.03 ஆம் திகதி அந்த விண்ணப்பம் இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் பயிலுனர் பட்டாதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும் வரை ஏனைய ஆசிரியர் நியமனங்கள் எதுவும் நடைபெறாது என்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் விண்ணப்பம் கோரப்பட்டு இதுவரையில் நியமனமனக்கடிதம் வழங்கப்படாத நியமனங்களும் இடைநிறுத்தப்படாலாம்.
தென் மாகாண ஆசிரியர் நியமனம் இடைநிறுத்தப்பட்ட அறிவித்தலைப் பார்வையிட Click here
தென்மாகாண ஆசிரியர் நியமனம் வழங்குவதற்காக விண்ணப்பம் கோரப்பட்ட அறிவித்தலைப் பார்வையிட Click here