லங்கா ஜொப் இன்ஃபோவின் ஊடாக தரப்பட்ட வினைத்திறன் தடைதாண்டல் மற்றும் போட்டிப் பரீட்சைகளுக்கான வழிகாட்டல் என்ற அடிப்படையிலான கட்டுரைகளின் தொகுப்புகள் அனைத்தினதும் விபரத்தினை கீழ்வரும் லிங்கில் காணலம்
https://www.lankajobinfo.com/2021/03/SLTSEBFullGuide.html
அரச சேவைக்கு ஆட்களை இணத்துக் கொள்வதற்கான நடைமுறைகள்.
ஒவ்வொரு நிறுவனங்களிலும் பதவிகள் குறித்த பதிவேட்டின் பிரகாரம் அடுத்த
வருடத்தில் வெற்றிடமாகின்ற பதவிகளின் எண்ணிக்கைகள் குறித்து அதனது தலைமை
நிறுவனத்திற்கு வருடாந்தம் அறிக்கை சமர்ப்பிக்கப்டுவதுண்டு. இவ்வாறு
பெற்றுக்கொள்ளப்படும் தகவல்களின் அடிப்டையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் அடுத்த
வருடம் வெற்றிடமாகின்ற பதவிகளின்
விபரங்கள், ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்ட
நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ஆட்களைச்
சேர்த்துக் கொள்வதற்கு அதிகாரம் பெற்ற நிறுவனத்திற்கு கிடைக்கின்ற
தகவல்களின் அடிப்படையில் குறித்த பதவிக்கு
ஆட்களைச் சேர்த்துக் கொள்வது தொடர்பாக விசேடமாக அனுமதிகள் பெறவேண்டிய
இடங்களில் அனுமதியினைப் பெற்றுக் கொண்டு.
அந்தந்த பதவிக்கான பிரமாணக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள விதி
முறைகளுக்கு அமைய அந்தந்த பிரமாணக் குறிப்பில்
குறிப்பிடப்படுகின்ற தகுதிகளைப் பெற்றுள்ள பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள்
கோரப்படும். இந்த விண்ணப்பங்கள் நாட்டில்
காணப்படுகின்ற செய்திப்பத்திரிகைகள் அல்லது வர்த்தாமாணி அறிவித்தல்கள் ஊடாக அல்லது
வேறு விதங்களில் பிரசுரிக்கப்படும்.
குறித்த பதவிக்கான ஆட்கள் போட்டிப் பரீட்சை ஊடாக சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்
என்பதாக குறித்த பதவிக்குரிய பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்குமாயின்
அதற்கான பரீட்சையை நடாத்தித் தருமாறு பரீட்சை ஆணையாளரிடம் கோரிக்கை
விடுக்கப்படும். அதற்கமைய குறித்த பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகளுக்கு
ஏற்ப திறந்த அடிப்டையிலும் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலும் விண்ணப்பங்கள்
கோரப்பட்டு அதன் பின்னர் குறித்த பரீட்சையை நடாத்தி புள்ளிகளை குறித்த
நிறுவனத்துக்கு பரீட்சை ஆணையாளர் அனுப்பி வைப்பார். குறித்த பரீட்சையின் பெறுபேறுகள்
கிடைக்கப்பெற்ற பின்னர் அந்த புள்ளிகளின் அடிப்டையில் அதிக புள்ளிகளைப்
பெற்றவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். பதவி வெற்றிடங்கள்
காணப்படுகின்ற தொகையிலும் பார்க்க அதிகமான தொகையினர் நேர்முகப் பரீட்சைக்கு
அழைக்கப்படுவர். உதாரணமாக 100 பதவிவெற்றிடங்களுக்காக போட்டிப் பரீட்சை
நடாத்தப்படுமாயின் 100 ஐ விட அதிகமானவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படுவர். இவ்வாறு
எத்தனை பேர் அதிகமாக அழைக்கப்பட வேண்டும் என்பதுவும் சேவைப் பிரமாணக் குறிப்பில்
குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் நேர்முகப்பரீட்சைக்கு புள்ளிகள் வழங்கட வேண்டுமா
இல்லையா என்பது குறித்தும் குறித்த சேவைப் பிரமாணக் குறிப்பில்
குறிப்பிடப்பட்டிருக்கும். நேர்முகப் பரீட்சைக்கு புள்ளிகள் வழங்கப்படுவதில்லை
எனின் விண்ணப்பதாரி குறித்த பதவிக்கான
அடிப்படைத் தகைமையைப் பெற்றுள்ளாரா
என்பதனைப் பரிசோதிப்பதற்காகவே நேர்முகப்பரீட்சை நடாத்தப்படும். இந்த
நேர்முகப்பரீட்சை சான்றிதழ்களை
சரிபார்க்கின்ற அடிப்படையிலேயே அமைவதுடன் அவைகளுக்கு புள்ளிகள்
வழங்கப்படுவதில்லை.
அந்த அடிப்படையில் போட்டிப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்டவர்களில் குறித்த
பதவிக்கான விண்ணப்பங்கள் கோரும் போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்பவர்கள் அந்தப் பதவி
வெற்றிடங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டு குறித்த பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள்
வழங்கப்படும்.
அரச பதவிகள் அனைத்துமே அந்தந்த பதவிகளுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பின் அடிப்டையிலேயே வழங்கப்டுவதானால்
சேவைப் பிரமாணக் குறிப்பு என்றால் என்ன
என்பதனை விளங்கிக் கொள்வது பதவிகளை அடைந்து கொள்ள முயற்சிப்பவர்களுக்கு உதவுவதாக அமையும்
சேவைப் பிரமாணக் குறிப்பு.
எங்களில் ஒருவர் யாதேனும் ஒரு தொழிலுக்காக விண்ணப்பிக்கும் போது சுய
விவரங்கள் அடங்கிய பத்திரம் ஒனறைச் சம்ரப்பிக்கின்றோம் என்பதை அனைவரும்
அறிந்திருப்பீர்கள். அதில் பெயர், விலசாம், தொலைபேசி இலக்கம் என தனிப்பட்ட
தகவல்களும்.. பாடசாலைக்கல்வி உயர்கல்வி என கல்வித் தகைமை குறித்த தகவல்களும்,
தொழில் தகைமை தனது இலக்கு என்பனவும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது இந்த
சுயவிவரக் குறிப்புக்கள்அடங்கியஆவணமானது அந்த ஆவணத்தைச் சமர்ப்பிப்பவர் யார் என்பனையும்அவர்
எத்கையவர் என்பனையும் ஒரு பார்வையில் அடையாளம் காட்டுவதாக அமையும் இதே போன்று அரச
தொழில் ஒன்றின் அடிப்படைத் தகவல்களையும் அந்த சேவை குறித்த விபரங்ளையும்
குறித்த ஒரு ஒழுங்கு முறையில்
குறிப்பிடுகின்ற தகவல் படிவமாக சேவைப்
பிரமானக் குறிப்ப்பினைக் குறிப்பிடலாம்.
சேவைப் பிரமாணக்
குறிப்புகளில் பொதுவாக 1 முதல் 15
வரையான பகுதிளை அல்லது அதனிலும் அதிகமான
இலக்கங்கள் ஊடாக சேவையின் பகுதிகள் விளக்கப்பட்டிருக்கும்.
சேவைப் பிரமானக் குறிப்புக்களில் பொதுவாக
உள்ளடக்கப்படும் விடயங்கள் ஒவ்வொன்றாக கீழே விளக்கமளிக்கிப்படுகின்றது.
1.
நடைமுறைக்கு
வரும் திகதி ;-
இந்த சேவைப் பிரமாணக் குறிப்பு எந்த திகதியிலிருந்து நடைமுறைக்கு
வருகின்றது என்பது இதன் கீழ் குறிப்பிடப்படும்.
இந்த பிரமாணக் குறிப்பானது எந்த
திகதியில் வர்த்தமாணியில் பிரசுரிக்கப்பட்டாலும்
இங்கு 1 ஆம் இலக்கத்தின் கீழ்
குறிப்பிடப்படுகின்ற திகதியே பிரமாணக்
குறிப்பு செல்லுபடியாகும் தினமாகின்றது. பெரும்பாலும் அனைத்து சேவைப்பிரமாணக்
குறிப்புக்களிலும் நடைமுறைக்கு வரும்
திகதி என்பதே முதலாவது இலக்கமாக்க்
குறிப்பிடப்படுகின்ற போதிலும் சில
சேவைகளின் பெயர்கள் முதலாவது இலக்கத்தின் கீழ்குறிப்பிப்படுகின்ற சந்தர்ப்பங்களும்
உண்டு. எப்படியாயினும் செல்லுபடியாகும்திகதி என்பது கட்டாயமாக பிரமாணக் குறிப்பின்
ஆரமப்த்திலேயே குறிப்பிடப்டுகின்றது.
2.
நியமன
அதிகாரி;-
சேவைப் பிரமானக்
குறிப்பில் அடுத்ததாக குறித்த நியமனத்தினை வழங்குவதற்கு அதிகாரம் பெற்றவர் யார் அல்லது
அதிகாரம் பெற்ற நிறுவனம் எது என்ற விடயம் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு
நியமனத்தினை வழங்குவதற்கு பொறுப்பானவர் அல்லது அவரினால் அதிகாரம் வழங்கப்பட்ட
நிறுவனத்தினை இது குறித்து நிற்கும். உதாரணமாக அரசாங்க சேவைகள் ஆணைக்குழு அல்லது அந்த நிறுவனத்தினால் அதிகாரம்
பெற்ற நிறுவனம் என்பதாக குறிப்பிடப்பட்டிருக்கலாம். இந்த இடத்தில் குறிப்பிடப்படுகின்ற
நிறுவனத்திற்கு பொறுப்பானவரே நியமனக் கடிதத்தில் கையொப்பம் இடுவார். குறித்த
நியமனம் பெற்றவரின் சேவை நிரந்தரமாக்கல், பதவி உயர்வுகள், ஒழுக்காற்று நடவடிக்கைகள், இடமாற்றங்கள் என்பன
இந்த அதிகாரியினாலேய மேற்கொள்ளப்படுவதுண்டு
3.
சேவை வகைகள்-
இந்தப் பகுதியில்
குறித்த சேவைக்குரிய வகைகள், அதனது தரங்கள் மற்றும் குறித்த சேவைக்காக
நியமனங்களைப் பெற்றுக்கொள்கின்றவர்களிடம் ஒப்டைக்கப்படுகின்ற பணிகள் என்பன குறிப்பிடப்படும்,
உதாரணமாக அரச முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் எனும் பதிவியினது சேவைப்பிரமானத்தில்
அந்த பதவிக்குரிய இரண்டுகையான சேவைகளும் தரங்களாக தரம் III தரம் II தரம் I மற்றும் முகாமை சேவை உத்தியோகத்தர் விசேட தரம் என்பதாக
குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்களிடம் ஒப்டைக்கப்படுகின்ற பணிகள் வரையறுக்கப்படுவதுடன்
திணைக்ளத் தலைவரினால் ஒப்படைக்கப்படுகின்ற எந்த ஒரு பணியையும் மேற்கொள்ளவேண்டும்
என்பதாக்க் குறிப்பிடப்படும்.
4.
சேவைக்குரிய
கடமைகளும் பொறுப்புக்களும்.;-
எந்த ஒரு சேவைக்கும் என அதற்கே உரிய கமைகள், பொறுப்புக்கள் என்பன இந்தப் பகுதியில் வரையறுத்துக் குறிப்பிடப்படும். இந்தப் பகுதியில் விஷேடமாக எடுத்துக்காட்டப்படும் பணிகளை இந்த சேவைக்குரியவர்கள் மேற்கொள்வதற்கு கடமைப்பட்டிருக்கின்றனர்.
இந்தக் கட்டுரைத் தொடரின் பகுதி 1 இனை வாசிக்க
https://www.lankajobinfo.com/2021/02/1.html
தொடரும்.....
Rafi Sharofdeen
Government Translator
எமது வட்சப் குழு மற்றும் முகநூல்பக்கத்தில் இணைய கீழ்வரும் படங்களில்கிளிக் கெய்யவும்.