அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற அரச கரும மொழித்திறன் பரீட்சையில் சித்தியடைகின்றவர்களுக்கு மேற்படி 25,000 ரூபாய் கிடைக்கப்பெறுவதில்லை. எனினும் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் NLQ எனும் பெயரில் பிரத்தியேகப் பரீட்சை ஒன்றினை நடாத்துகின்றது. அந்தப் பரீட்சையில் 80 புள்ளிகளுக்கு மேல் பெறுகின்றவர்களுக்கு 25,000 ரூபா 65 புள்ளிகளுக்கு மேல் பெறுகின்றவர்களுக்கு 20,000 ரூபா என்ற அடிப்படையில் வழங்குகின்றது. இது குறித்து 8/2020 எனும் இலக்கமிடப்பட்ட அரச நிர்வாக சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.
NLQ பரீட்சை குறித்த பூரண விபரம் பெற்றுக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.
அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்றபடுகின்ற அரச கரும மொழித் தேர்ச்சியினை பெற்றுக்கொள்ள வேண்டியவர்கள் யார்?
2007.07.01 ஆம் திகதி முதல் அரசாங்க சேவையில் /மாகாண அரச சேவையில் சேர்த்துக் கொள்ளப்படும் அல்லது பதவி உயர்வு பெறுகின்ற உத்தியோகத்தர்கள் அனைவரும் சேவையில் இணைந்துகொள்கின்ற அரசகரும மொழிக்கு மேலதிகமாக மற்றைய அரசகரும மொழிக்கான தேர்ச்சியை சேவையில் சேர்ந்து 5 வருடங்களுக்குள் தேர்ச்சி பெறுதல் வேண்டும்.அதாவது 2007.07.01 இற்கு முன்னர் ஆசிரியர் சேவையில் இணைந்திருப்பவர்களுக்கு இந்தப் பரீட்சை அவசியமில்லை எனினும் 2007.07.01 ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியரா இணைந்து 2007.07.01 ஆம் திகதிக்குப் பின்னர் அதிபராகவோ கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களாகவோ அல்லது ஆசிரிய ஆலோசகர்களாகவோ அல்லது விரிவுரையாளர்களாகவோ பதவி உயர்வு பெற்றவர்கள் இந்தத் தேர்ச்சியினைப் பெறவேண்டும்.
அத்துடன் 2007.07.01 இற்கு முன்னர் ஆசிரியர் சேவையில் இணைந்து ஆசிரியர் சேவையிலேயே 2 , 1 தரங்களுக்கு தர உயர்வு பெற்றவர்கள் இந்த மொழித் தேர்ச்சியினைப் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை.
தற்போது நடைபெறுகின்ற பரீட்வை முடிவுகள் எப்போது வௌியிடப்படும்?
தற்போதளவில் அதிகளவானவர்களுக்கான பரீட்சைகள் நடாத்தப்பட்டு முடிவடைந்துள்ளது என்பதாகவும் இன்னும் சிறய அளவினரே பரீட்சைக்கு தோற்றவிருப்பதாகம் அவர்களுக்கான பரீட்சைகள் நடாத்தி முடிந்ததன் பின்னர் அனைவருக்குமான பெறுபேறுகள் ஒரே நேரத்தில் வௌியிடப்படும் என்பதாகவும் அரச மொழிகள் திணைக்களத்திலிருந்து அறியக்கிடைத்தது. அந்தவழகயில் இன்னும் இரண்டு மாத காலத்துக்குள் பெறுபேறுகள் கிடைக்கப்பெறலாம்.
தற்போது சேவையில் இணைந்து 5 வருடங்கள் கழிந்திருப்பின் சம்பளப் படியேற்றம் நிறுத்தப்படுமா?
. இல்லை. அரச கரும மொழித் தேர்ச்சியினைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் அரச நிர்வாகச் சுற்றுநிருபம் 18/2020 இன் ஊடாக வழங்கப்பட்டது. 2022.10.28 அம் திகதி வௌியடப்பட்ட 18/2020 (I) எனும் சுற்றுநிருபத்தின் ஊடாக இந்தக் காலக்கெடு 2024.10.16 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இந்த தேர்ச்சினை 2024.1016 இற்கு முன்னதாக பெற்றுக்கொள்வது போதுமானதாகும்.
அரச நிர்வாகச் சுற்றுநிருபம் 18/2020 பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்.
அரச நிர்வாகச் சுற்றுநிருபம் 18/2020 (I) பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்
அரச கரும மொழித் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மொழித்திறன் பரீட்சை அடுத்து எப்போது நடைபெறும்?
தற்போது நடைபெறுவது இறுதியாக நடைபெறுகின்ற பரீட்சையாகும். இந்தப் பரீட்சைக்காக 2020 ஆம் ஆண்டு விண்ணப்பம் கோரப்பட்டது. இந்தப் பரீட்சையின் பின்னர் இனி பரீட்சைகள் நடாத்தப்படமாட்டாது.
அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற பரீட்சையில் சித்தியடையாதவிடத்து அல்லது பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போகுமிடத்து என்ன செய்ய வேண்டும்?
2020.10.16 ஆம் திகதி 2020.10.16 ஆம் திகதி வௌியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றறிக்கை 18/2020 இன் ஊடாக மேற்படி பரீட்சை முறைக்குப் பதிலாக குறிப்பிட்ட மணித்தியாலங்களைக் கொண்ட பாடநெறியினைப் பூர்த்தி செய்வதன் ஊடாக இந்த தகைமையைப் பூர்த்திசெய்யலாம் என்பதாக மாற்றியமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உங்களது சேவைத் தொகுதிக்கு உரிய மணித்தியால அளவு பாடநெறியினை நீங்கள் பூர்த்தி செய்யவேண்டும். இதற்கான பாடநெறிகள் உங்களது நியமண அதிகாரிகளின் ஊடாக ஏற்பாடு செய்யப்படும்.
இது தொடர்பிலான முழுமையான விளக்கத்தினை பெற்றுக் கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.
அரச கரும மொழித் தேர்ச்சிக்கான பாடநெறிகள் ஆங்காங்கே ஒன்லைன் ஊடாக கட்டணம் செலுத்தும் அடிப்படையில் நடைபெறுகின்றது அவற்றின் ஊடாக வழங்கப்படுகின்ற சான்றிதழ் இந்தத் தேர்ச்சியினைப் பெற்றுக்கொள்வதற்கு போதுமானதா?
ஒன்லைன் ஊடாக பல இடங்களிலும் இந்தப் பாடநெறி தனிப்பட்ட நபர்களால் நடாத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது. இந்த பாடநெறிகள் ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது ஏற்றுக்கொள்ளப்படாதா என்பதாக அரச கரும மொழிகள் திணைக்ளமோ அல்லது அரச நிர்வாக அமைச்சோ எந்த விதத் தகவலையும் இது வரையில் வௌியிடவில்லை. அரச கரும மொழித் திறனினை பெற்றுக்கொள்வதற்கான பாடநெறிகள் குறித்து அரச கரும மொழிகள் திணைக்களமே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு யாரேனும் பாடநெறிகள் நடாத்தி இது அரச கரும மொழிகள் திணைக்களம் ஏற்றுக்கொள்ளும் என்பதாக குறிப்பிடுவார்களாயின் அவர்களது பெயர் விபரம் என்பவற்றைக் குறிப்பிட்டு அவர் நடாத்தும் பாடநெறியானது மொழித் தேர்ச்சி ஏற்றுக்கொள்ளப்படும் என்பதாக அந்த நபர் குறிப்பிடுவதாகவும், இந்த நபர் நடாத்தும் பாடநெறி ஏற்றுக்கொள்ளப்படுகின்றதா என்பதனை எழுத்து மூலம் அரச கருமமொழிகள் திணைக்களத்தில் வினவி உரிய பதிலைப் பெற்றுக்கொண்டு அதன் பின்னர் முடிவெடுக்கலாம்.
ஆக்கம் - lankajobinfo.com