Open Competitive Examination for the Recruitment of Court Interpreter (Sinhala/Tamil) (Sinhala/English) (Tamil/English) Grade III of the Court Management Assistants’ Service in the Scheduled Public Officers’ Service
அறிமுகம்
உரை பெயர்ப்பாளர் பதவிக்காக ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டிருக்கின்ற நிலையில் அந்த பதவி குறித்த விபரங்களை வழங்கி இந்த பதவி குறித்து புரிந்து கொண்டு அதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கச் செய்வதற்கு lankajobinfo.com இணையத்தளம் இந்தப் பதிவின் ஊடாக முயற்கிக்கின்றது.
விண்ணப்ப முடிவுத்திகதி 2021.07. 12
உரை பெயர்ப்பாளர் என்பவர் யார்?
இலங்கையில் நீதி மன்றங்களில் வழக்குகள் இடம்பெறும்போது வழக்கு விசாரிக்கின்ற நீதிபதி குறிப்பிடும் விடயங்களையும், வாதி பிரதிவாதி சாட்சிகள் என்போர் குறிப்பிடும் விடயங்களை தேவைப்படுமிடத்து வேறு மொழிகளில் மொழிபெயர்த்துச் சொல்வதற்ககான ஒழுங்கு முறையொன்று நீதிமன்றக் கட்டமைப்பில் காணப்படுகின்றது. இந்தப் பணிக்கான நியமிக்கப்படுகின்றவர் உரை பெயர்ப்பாளர் என அழைக்கப்படுவார். வழக்குகள் விசாரிக்கப்படும் போது சம்பந்தப்பட்டவர்களது பெயர் கூறி அவர்களை அழைப்பதும் இந்த உரை பெயர்ப்பாளரின் பொறுப்பாகும். இந்தப் பதவிப் பெயர் ஆரம்பத்தில் தோல்க்க முதலி என்பதாக இருந்து பின்னர் உரை பெயர்ப்பாளர் என்பதாக பதவிப் பெயர் மாற்றப்பட்டிருக்கின்றது.
இந்தப் பதவிக்கான ஆட்கள் சேர்க்கப்படும் முறைகள்.
இந்தப் பதவிக்கு மூன்று விதமான மொழித் தொகுகதிகளில் ஆட்கள் சேர்க்கப்படுவர். சிங்களம்-தழிழ், சிங்களம்-ஆங்கிலம், தமிழ்-ஆங்கிலம். மேற்படி மொழித் தொகுதிகளில் ஏதாவது இரண்டு மொழிகளில் திறமை இருப்பவர்கள் இந்தப் பதவிக்காக விண்ணப்பிக்கலாம்.
உரை பெயர்ப்பாளர் மொழி பெயர்ப்பாளர் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டா?
உரை பெயர்ப்பாளர் எனும் பதவியை மொழி பெயர்ப்பாளர் பதவி என்பதாக பலரும் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். ஏதாவது ஒரு மொழிபெயர்ப்பினை எழுத்து மூலமாக் மேற்கொள்பவர் மொழிபெயர்ப்பாளர் எனப்படுவார். ஏதாவது ஒரு பேச்சை அதே நேரம் இன்னுமொரு மொழிக்கு மொழிபெயரத்து வாய் மொழி மூலம் கூறுபவர் உரை பெயர்ப்பாளர் எனப்படுவார்.
வயதெல்லை என்ன?
18 வயதுக்குக் குறையாலும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
எவ்வளவு சம்பளம் கிடைக்கும்;-
சம்பளத்திட்டமாக 28,940.00 - 10x300 - 11 x 350 -10 x 560 - 10 x 660 - ரூா 47,990.00 என்பதாகக் குறிப்பிடப்படுள்ளது.
ஆரம்ப சம்பளம் 28,940.00
வாழ்க்ைகச் செலவுக் கொடுப்பனவு 7800.00
வேறு கொடுப்பனவு 2500.00
அத்துடன் 1000.00 ரூபாவுக்குக் குறையாத இன்னுமொரு கொடுப்பனவும் இவர்களுக்கு வழங்கப்படும்.
அந்த அடிப்படையில் ரூபா 40 ஆயிரத்திலிம் அதிகமான மொத்த சம்பளமாகக் கிடைக்கப்பெறும். இதிலிருந்து ஓய்வூதியத்துக்காக 6% கழிக்கப்படும்.
பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித்கைமைகள் என்ன?
(அ) கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சாதாரண தரம்) பரீட்சையில் தழிழட,சிங்களம்/ ஆங்கில இலக்கியம் ஆகிய பாடங்களுள் இரண்டு பாடங்களுக்கு திறமைச் சித்தியும்.
மேற்படி இரண்டு பாடங்களுடன் கணிதம் உள்ளடங்கலாக ஆகக்குறைந்தது நான்கு (4) பாடங் களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (6) பாடங் களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் ;
அத்துடன்
(ஆ) கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் (பொதுப் பரீட்சை மற்றும் ஆங்கில மொழி தவிர)ஒரே அமர்வில் சித்திபெற்றிருத்தல். பழைய பாடத்திட்டத்தின் கீழ் மூன்று (3) பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருப்பது போதுமானது.
அத்துடன் வேறு சர்வதேச மொழிகளில் சித்தியடைந்திருப்பது மேலதிகத் தகைமையாகக் கருதப்படும்.
மேற்படி தகைமைகளை விண்ணப்பமுடிவுத்திகதிக்கு முன்னர் பெற்றிருக்க வேண்டும்.
தெரிவுமுறை எவ்வாறு இடம்பெறும்?
1) எழுத்துமூலப் பரீட்சை ஒன்று நடாத்தப்படும். ஒவ்வொரு பாட்த்திலும் 40% புள்ளிகளுக்கு மேல் பெறுகின்றவர்கள் சித்தியடைந்தவர்களாக கருதப்படுவர். அவ்வாறு பரீட்சையில் சித்தியடைகின்றவர்களில் அதிக புள்ளிகளைப் பெறுகின்றவர்கள் முதலிலும் அதற்கு அடுத்த புள்ளிகளைப் பெறுகின்றவர்கள் அடுத்தடுத்தும் என ஆவணப்படுத்தப்பட்டு, நிலவுகின்ற வெற்றிடங்களுக்கான தொகையினர் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்படுவர். நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுகின்றவர்கள் தங்களது மொழித் திறனை வௌிப்படுத்துமிடத்து பதவியினைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது. (செவிமடுக்கின்ற மொழியை அடுத்த மொழிக்கு மொழி மாற்றம் செய்ய முடுயுமா என்பது குறித்து நேர்முகப்பரீட்சையில் பரிசோதிக்கப்படும்.)
எழுத்துப் பரீட்சையின் கட்டமைப்பு
01) மொழிப் பரீட்சை ;- இது மொழியாற்றலை பரிசோதிப்பதாக அமையும். க.பொ.த (சா/த) தமிழ்மொழி புத்தகத்தில் உள்ள விடயங்களை மீட்டிப் பார்த்துக்கொள்வது போதுமானது. குறித்த வினாத்தாள் கீழ்வரும் விடயங்களை உள்ளடக்கியதாக அமையும். கிராம சேழவயாளர் பரீட்சை முகாமை உதிவியாளர் பரீட்சை என்பவற்றின் வினாத்தாள்களுக்கு ஒப்பாக இது அமைந்திருக்கும்.
இவ்வினாப்பத்திரம் விண்ணப்ப தாரர்களின் கருத்துத் தெரிவிப்பு,
புரிந்துகொள்ளுதல்,
எழுத்துரு அமைப்பு,
மொழியும் கட்டுரையும்,
வழங்கப்பட்ட கடிதமொன்றை வரைதல்,
வழங்கப்பட்ட பந்தியொன்றை சுருக்குதல்.
வழங்கப்பட்டுள்ள தரவுகளின்படி விபரங்களைத் தயாரித்தல்,
வாக்கியங்களசிலவற்றின் கருத்தைத் தனிவாக்கியத்தில் எழுதுதல்,
இலகுவான இலக்கணப் பயன்பாடு
குறித்த அறிவைப் பரிசீலனை செய்யும் வினாக்களைக் கொண்டது. சகல
வினாக்களுக்கும் விடை அளித்தல் வேண்டும்.
இந்த வினாப்பத்திரத்திற்கு 100 புள்ளிகள் வழங்கப்படும்.
(02) பொதுஅறிவும் பொது உளசார்பும்; விண்ணப்பதாரரர்களின் கிரகித்தல் திறனையும் பொது அறிவுத்திறனையும் பரிசோதிப்பதற்காக பொது அறிவும் உளச்சார்பும் என்ற வினாத்தள் வழங்கப்படும்.
இவ்வினாப்பத்திரம் மூலம்
எண்கணிப்பு,
தர்க்கிக்கும் சக்தி,
பிரச்சினைகளைத் தீர்த்தல்,
தீர்மானம் மேற்கொள்ளும் ஆற்றலைப் பரிசோதிக்கின்ற அடிப்படையில் தயாரிக்கப்படும் . எல்லா வினாக்களுக்கும் விடை அளித்தல் வேண்டும்.
வினாப்பத்திரத்திற்கு 100 புள்ளிகள் வழங்கப்படும்.
03 மொழிபெயர்ப்பு;-
இங்கு விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்கின்ற இரண்டு மொழிகளுக்கிடையே மொழிமாற்றம் செய்யவேண்டிய அடிப்படையில் இந்த வினாப்பத்திரம் அமைந்திருக்கும்.
ஆங்கித்திலிருந்து தமிழுக்கும் தமிழிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்த்தல்,
சிங்களத்திலிருந்து தமிழுக்கும் தமிழிருந்து சிங்களத்துக்கும் மொழிபெயர்த்தல்,
ஆங்கித்திலிருந்து சிங்களத்திற்கும், சிங்களத்திலிருந்து, ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்த்தல்,
என்ற அடிப்படையில் ஏதாவது ஒரு தொகுதியினை இங்கு தெரிவு செய்திருக்க வேண்டும்.
இந்த வினாப்பத்திரம் மொழி பெயர்ப்பாளர் பரீட்சையின் அளவு கடினமாக அமைவதில்லை, இரண்டு மொழிகளையும் புரிந்துகொள்ளும் திறன் இருப்பவர்கள் இந்தப் பரீட்சையை இலகுவாக சித்தயடையலாம்.
மேற்படி மூன்று வினாத்தாள்களுக்கும் தௌிவற்ற எழுத்துக்களுக்காக புள்ளிகள் குறைக்கப்டும்.
பரீட்சை எங்கு நடைபெறும் இடங்கள்
இந்தப் பரீட்சையானது கொழும்பில் மாத்திரம் நடைபெறுகின்றது.
நேர்முகப் பரீட்சையில் தெரிவானதன் பின்னரான செய்பாடுகள் யாவை?
நேர்முகப் பரீட்சையில் தெரிவாகின்றவர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர். அதனுடன் உரிய பயிற்சிகளும் சேவையின் போது வழங்கப்படும்.
இறுதியாக.
முகாமை உத்தியோகத்தர் சேவை, கிராம உத்தியோகத்தர் சேவை போன்றே இந்தப் பதவியும் இரணடாவது மட்டத்திற்கு உட்படுகின்ற பதவியாகும். உரைபெயர்ப்பாளர் சேவையில் இணைபவர்கள் குறிப்பிட்ட சில காலம் பணியாற்றியதான் பின்னர் நீதி அமைச்சின் கீழ் வருகின்ற பதிவாளர் போன்ற உயர் பதவிகளுக்காக உள்வாரியாக விண்ணப்பிக்கும் தகுதியினைப் பெறுகின்றனர். அத்துடன் எந்த சேவையிலும் இல்லாத அடிப்படையில் டிசம்பர் மாதத்தில் குறிப்பிட்ட சில தினங்கள் விசேட விடுமுறையும் இவர்களுக்கு வழங்கப்படுகின்றது. தகைமை இருப்பவர்கள் இந்தப் பதவிக்காக விண்ணப்பித்து அரச சேவையில் கால் பதிப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றாக இதனை மாற்றிக் கொள்ளலாம்.
அத்துடன் மிக முக்கியமான விடயம் இந்தப் பதவியில் இருப்பவர்களுக்கு நீதிபதிகளுடனும், வழக்கறிஞர்களுடனும் மிக நெருக்கமான பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைக்கும். அத்துடன் வழக்குகளின் போக்குகள் குறித்து சிற்ந்த அறிவும் சட்த்துறை சார்ந்தவர்களின் தொடர்புகளும் ஏற்படும். சட்டத்துறையில் பயில்வதற்கு நாட்டமிருப்பவர்கள் இந்தப்பதவிக்கு விண்ணப்பிப்பது அவர்களது இலக்குகளை அடைந்து கொள்ள ஒத்தாசையாக அமையும்.
கட்டுரையின் பூரண உரிமை lankajobinfo.com இணையத்தளத்துடையதாகும்.
எமது இணையத்தளத்தில் பதியப்படுகின்ற விடயங்களை உடனுக்குடனே பெற்றுக்கொள்வதற்காக எமது முகநூல் பக்கத்திலும் வட்சப் குழுமங்களிலும் இணைந்து கொள்ளுங்கள் அதற்காக கீழே உள்ள லிங்கில் சென்று குறித்த படங்களில் கிளிக் செய்வதன் ஊடாக இணையலாம்.