>

ad

தாபனவிதிக் கோவையின் இரண்டாவது பகுதி - அரச ஊழியர்களின் ஒழுக்கம்

அரச ஊழியர்களின் ஒழுக்கமும் ஒழுக்காறு நடவடிக்கைகளும்
 பகுதி 2



லங்கா ஜொப் இன்ஃபோ தளத்தில் வௌியான அரச ஊழியர்களுக்கு பயன் தருகின்ற அனைத்து ஆக்கங்களிளையும் கீழ்வரும் லிங்கில் பார்வையிடலாம்.

https://www.lankajobinfo.com/2021/03/SLTSEBFullGuide.html


அரச ஊழியர்கள் மது அருந்துவது எந்த வகையான குற்றமாகும்?

அரச ஊழியர் குற்றச் செயல்கள் புரியாதிருக்க அவர்கள இருந்துகொள்ள வேண்டிய முறைகள் என்ன?

அரச ஊழியர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவது குற்றமா?

ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கும் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் என்ன?

அரச ஊழியர்கள்பத்திரிகைகளுக்கு ஆக்கம் எழுதுவது குற்றமா?

அரச ஊழியர்கள் புத்தகம் வௌியிடலாமா?


மேற்படி விபரங்களை தாபன வித்திக் கோவையின் XLVII ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய ​ இந்த ஆக்கம் விளக்குகின்றது.

.......

சமன்மலியின் திருமண விழா அலுவலக நாளொன்றில் நடந்தது. அத்தினத்தில் வீரகம பிரதேச செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும்  கலந்து கொண்டனர். காரியாலயத்திற்கு அருகாமையிலுள்ள ஹேட்டல் ஒன்றில் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அனைவரும் கலந்து கொள்ள வசதியாக இருந்தது. பெண் உத்தியோகத்தர்கள் வெகு நேரம் ஹேட்டலில் தங்கியிருந்து பின்னர் காரியலயத்துக்கு வந்த சேர்ந்தனர். ஆனால் ஆண்கள் பெண்களைவிடவும் தாமதித்தே காரியாலயம் வந்தனர். அன்றைய தினம்  அரவிந்த காரியாலயத்தில் இருந்தமையினால் அலுவலர்கள் மிகவும் சிறமப்பட்டே நேராக நிற்க முயற்சித்தனர். அன்றைய தினம்  அரவிந்த வேலை முடிந்து வீடு சென்றதும்  சற்று அதிகமாக மது அருந்திய  உத்தியோகத்தர்கள் காரியாலய வலாகத்தில் ஆடிப்பாடி குதூகழித்தனர். அனைவரும் வீடு செல்ல சுய உணர்வு இல்லாமை காரணமாக  அதிக நேரம் காரியாலயத்தில் தங்கி நின்றனர். அரவிந்த இது குறித்து அறிந்திருந்ததுடன்  கணக்காளர் காசீம் இந்த செயற்பாடு பிடிக்காமையால்  குறுகிய லீவில் வீடுசென்று விட்டார்.


14 வீரகம அலுவலக உத்தியோகத்தர்கள் காரியாலய நேரத்தில் மது அருந்திய நாற்றம் வீசும் விதத்தில் இருந்தமை எத்தகைய நடத்தையாகும்?

·         பாரிய துர் நடத்தை ஒன்றாக இது கருதப்படவேண்டும்.


15. வீரகம காரியாலயத்தின் மது அருந்தியிருத்தல் அல்லது மது நாற்றம் வீசும் விதத்தில் இருந்தமைக்காக மேற்கொள்ளப்படும் முறைசார் ஒழுக்காற்று நடவடிக்கையின் போது அவர்கள் குற்றமிழைத்தமையை உறுதிப்படுத்துவதற்கு எத்தகைய சாடசி போதுமானதாகும்?

·          காரியாலய வலாகத்தில் மது அருந்திய நாற்றம் வீசும் வித்ததில் இருந்தமை பாரிய குற்றமாகும். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும். ஒழுக்காற்று விசாரணையில் அக்குற்றம் செய்யப்பட்டுள்ளதாக நரூபிப்பதற்கு பதவி நிலை மட்டத்திலான அலுவலர்கள் இருவரின் சாட்சிகள் போதுமானதாகும். எனவே வீரகம பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மது அருந்தியிருந்தமைக்கு பிரதேச செயலாளர், மற்றும் கணக்காளரின் சாட்சிகள் போதுமானது. இவற்றுக்கு மேலதிகமாக அரச மருத்துவர் அல்லது சட்ட மருத்துவர் ஒருவரின் அறிக்கை ஒன்றினைப் பெற்றுக் கொள்ளலாம்.

16. யாரேனும் ஒரு அலுவலர் மது அருந்துதல் சம்பந்தமாக இரண்டாவது தடவையாக குற்றவாளியாகுமிடத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை யாது?

·         கட்டாயமாக பதவி நீக்கம் செய்யப்பபடல் வேண்டும்

17 அலுவலர் மது அருந்துதல் சம்பந்தமாக பதவி நீக்கம் செய்யப்பபடுவதற்கு பூரணப்படுத்தப்படவேண்டிய காரணிகள் யாவை?

·         மேலதிகமாக அரச மருத்துவர் அல்லது சட்ட மருத்துவர் ஒருவரின் அறிக்கை ஒன்றினைப் பெற்றிருக்க வேண்டும்

·         அவருக்கு எதிரான முறைசார் ஒழுக்காற்று விசானையில் அவர் போதையில் இருந்தது உறுதிப்படுத்தப்படவேண்டும்

18.  அரச உத்தியோகத்தர்கள் குற்றம் செய்வதிலிருந்து  பாதுகாப்பதற்காக அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய  முறைகள் குறித்து தாபன விதிக்கோவையின் XLVII அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.  அவைகளில் 5 தருக

           (1)  பூரண விசுவாசமாக இருத்தல்

           (2) ஒப்படைக்கப்படும் எந்த கடமையையும் முறையாக நிறைவேற்ற வேண்டும்

      III.  (3) சம்பந்தப்பட்ட உத்தியோகபூர்வ மதியுரைகளை (கட்டளைகள், சுற்றுநிருபங்கள்) விளங்கி ​கடைபிடிக்க வேண்டும்.

      IV.  (4)  தனது பெயரையும் சேவையினது நற்பெயரையும் பாதுகாக்க வேண்டும்

       V.   (5) தனிப்பட்ட கருமங்களுடன் முரண்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.

      VI.    (6) பதவி உயர்வுகள் தொடர்பாக எதாவது ஒரு வழியில் தூண்டுதல் செய்யக் கூடாது

    VII.      (07) முறை தவறிய நலன்கள் கருதி கடமைகளைப் பரிமாற்றிக் கொள்ளலாகாது.

   VIII.    (08)    பொது மக்களைக் கண்ணியப்படுத்த வேண்டும்

      IX.    (09)    மொழிப்பிரயோகம் ஒழுக்கமாக  அமைதல் வேண்டும்

        X.    (10) தமக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடமிருந்து பணம் சேர்க்கக் கூடாது

      XI.      (11)   தனிப்பட்ட கருமங்களின் நிமித்தம் அரச  ஊழியர்களையோ அல்லது அரச சொத்துக்களையோ பயண்படுத்தலாகாது *

     XII.       (12)   அரசுக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படலாகாது. *

 

*செயலாளரின் அனுமதியின்றி

 

·         கீழ்வரும் சம்பவத்தை கவனமாக வாசித்து கேட்கப்படும் வினாக்களுக்கு விடை தருக.

நீண்டகாலமாக மழை கிடைக்காமையினால் வட மாகாணம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டது. இந்த நிலைமை காரணமாக  அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் குடி நீரில்லாமலும் மக்கள் சிரமப்பட்டனர். அப்பிரதேச மக்களின் சுமூகமான வாழ்க்கை முறை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நீரூற்றுகள் வற்றிப் போனதன் காரணத்தால் வனவிலங்குகள் குடியிருப்புகளை நோக்கி வருவதானது மக்களை இன்னும் பாதிப்புக்குள்ளாக்கியது. நீண்ட காலத் திட்டம் இல்லாமை காரணமாக  ஒவ்வொரு வருடமும் இந்த நிலைக்கு இப்பகுதி உள்ளாகிவருகின்றது.  இவ்வறட்சி நிகயாய பிரதேச செயலகத்துற்பட்ட பகுதியை வெகுவாகப் பாதித்திருந்தது.  பிரதேசத்தின்  விவசாயிகள் மட்டுமன்றி  எல்லாப் படித்தர மக்களும் இந்த நிலையினால் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். பிரதேச செயலாளர் லலித் இத்தினங்களில் இரவு பகலாக வெளிக்களப் பணியில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.  பவுசர் தாங்கிகளின் மூலம் பிரதேசம் பூராவும் நீர் வினியோகிக்கும் திட்டம் ஒன்றும் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கு நிகராக வரட்சி நிவாரணப் பொருள் வினியோகமும் நடைபெற்றுக் கொண்டிருந்த்து. சிலர் இத்திட்டத்தை சீர் குழைக்கும் நோக்கில் மக்களைத் தூண்டி விட்டதன் விளைவாக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடலாயினர். இன்னும் சிலர் தமக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் குடி நீர் கிடைக்கவில்லை என ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக திரு லலித் அவர்களிடம் தொலைக்காட்சி சேவைகள் தெடர்ச்சியாகக் கருத்துக் கேட்டுக் கொண்டிருந்ன. திரு லலித் இது தெடர்பில் மௌனம் காத்து வந்த போதிலும் அவற்றுக்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தியிருந்தார். திரு லலித் இன் அமைதி காப்புக் குறித்து பொறுத்துக் கொள்ள முடியாத  காரியாலய சாரதி சரத் என்பவரும் முகாமை உதவியாளரான அஜித் என்பவரும் இணைந்து ஊடக நிறுவனங்களுக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற் கொண்டு உண்மை நிலை குறித்து விளக்கமளித்தனர். அவ்வேளை தமது செந்தப் பெயர்களைப் பயண்படுத்தாது வேறு பெயர்களில் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டனர்.  அந்த செய்தியினால் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் வந்து சேரத்துவங்கின.  உதவிப் பிரதேச செயலாளர் திரு சுரங்க இலக்கியத் துறையில் தேரச்சி பெற்றவர். கலையுடன் தொடர்புடைய  ஆக்கங்கள் கதைகள் என்பவற்றை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பது இவரது பொழுது போக்காக இருந்தது. தற்போதைய வறட்சி குறித்து  தொடர்ந்து  பத்திரிகைகளில் எழுத்லானார். “வறட்சியின் மடியில்” என்ற  தலைப்பில்  நாவல்  ஒன்றையும் வெளியிட திரு சுரங்க திட்டமிட்டிருந்தார்.

 

19. சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நீண்ட காலத்திட்டம் என்பதால் யாது விளங்கிக் கொள்கின்றீர்?

·         நீண்ட காலத்திட்டம் என்பது எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை முன்னதாகவே இனங்கண்டு அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வழி முறைகளை திட்மிடலும் செயற்படுத்தலுமாகும். வருடம் தோறும் குறித்த காலப் பகுதியில் வறட்சி  ஏட்படுவதை முன்னரே அறிந்திருப்பதால்  பகுதியின்  போதுமான நீரைப் பெற நிரந்தர வழிமுறை ஒன்றைக் கையாளல்.

 


20 சாரதி சரத் மற்றும் அஜித் ஆகியோரின் மேற்படி நடவடிக்கை குறித்து உமது அபிப்பிராயம் யாது?

·         அரசின் எந்த ஒரு உத்தியோகத்தரும் தனது பெயரில் அல்லது புனைப் பெயரொன்றில்  அல்லது  தனது பெயரை குறிப்பிடாது  எந்த ஒரு தொடர்பு சாதனங்களுக்கும் தகவல்களை வழங்கலாகாது. சரத் மற்றும் அஜித் என்பவர்களின் நடவடிக்கை பிரதேச வாசிகளுக்கு நன்மை பயப்பதாக அமைந்த போதிலும் அவர்களது குறித்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது.

22. பிரதேசத்தின் நிலைமை குறித்து ல்லிந்த ஊடகங்களுக்கு தெளிவு படுத்தாமை தனது பொறுப்புக்களை புறக்கணித்தமையாக கருத முடியுமா?

·         முடியாது. ஊடகங்கள் என்பது ஒரு நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரே ஊடகமாகக் கருத முடியாது. அதற்கான சில தீர்வுகளை அவர்களால் மேற்கொள்ள முடியும் என்ற போதிலும் அதற்கான தீர்வு காணும் பொறுப்பு அவர்களிடமில்லை.  எனவே பொறுப்புணர்வுடன் அவசியமான போது அவசியமான தகவல்களை அவசியமான அளவில் மக்களிடம் சென்றடையச் செய்வதற்கு  பொறுப்பானவர்கள் ஊடாக நிறுவனத்தினர் என்ற வகைகயில் குறித்த கவல்களை வழங்குவதற்கு ஒரு வழி முறை காணப்படுகின்றது. அதற்கான நடவடிக்கைகளை லலிந்த மேற் கொண்டிருப்பதால் அவர் பொறுப்புக்களைப் புறக்கணித்த்தாக கருத முடியாது.

23. அரச அலுவலகம் ஒன்று அல்லது அலுவலர் ஊடகங்களுக்கு  தகவல் வழங்கும் வழிமுறை யாது?

·         குறித்த காரியாலயத்திற்கு சொந்தமான அமைச்சின் செயலாளர் அல்லது திணைக்கலத் தலைவர் ஊடாக மக்கள் ஊடகங்களுக்கு  தகவல் வழங்க முடியும்

24 ஊடகங்களுக்கு  தகவல் வழங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் 5 தருக

          (1)      தகவல்கள்  ஊடகங்களுக்கு பிரயோசனமாதா இல்லயா என்பது

        II(2)  உண்மையான செய்திகள் சரியான புள்ளிவிபரங்ளைக் கொண்டிருத்தல்

      III.(3)  அபிப்பிராயங்கள் தெரிவிக்கலாகாது

      ( (4) அரசாங்கம் அல்லது அரச நிறுவனமொன்று  அல்லது அலுவலர் ஒருவரை இக்கட்டான நிலைக்கு ஆளாக்காத்தாக அமைதல் வேண்டும்

       V(5)     விமர்சித்தல் அடிப்படையில் இருக்கலாகாது

      VI.(6)      தகவல் துறைப் பணிப்பாளர் ஊடாக செய்திகளை வழங்குதல்

     (   (7)       பதவிப் பெயரில் உறுதிப்படுத்தப்பட்டதாக வழங்கவேண்டும் (உதாரணம்- அரச நிர்வாகச் செயலாளர்)

24. நிகயாய பிரதேச செயலகப் பிரிவின் நிலமை குறித்து  ஊடகங்களுக்கு செய்தி வழங்க அனுமதிக்கப்படவர் யார்?

·         அரச நிர்வாகச் செயலாளர்

26. சுரங்க என்பவர் பத்திரைகளுக்கு ஆக்கம் எழுதுவது குற்றம் என நீர் கருதுகின்றீரா?

·         அரச உத்தியோகத்தர் ஒருவரை அரசை அல்லது அமைச்சரவை, திணைக்களம் என்பன பாதிக்கப்படாத வேறு சாதாரண விடயங்களை  பத்திரிகைகளுக்கு அல்லது வேறு  ஏதேனும் வெளியீடு ஒன்றிற்கு தனது கையொப்பத்துடன் ஆக்கங்கள் அனுப்ப முடியம்,. தனது பெயரில் முன்னின்று இலத்திரன் ஊடகங்களில் சொற்பொழிவாற்றவும் வேறு விடயங்களை பகிரங்கப்படுத்தவும் முடியும்.

27. சுரங்க நாவல் எழுதுவதற்காக பிரதேசம் தொடர்பான் தகவல்கள் புள்ளிவிபரங்கள் பெற்றுக் கொள்வதற்காக எவ்வாறான நடவடிக்கைகளை மேற் கொண்டிருப்பார் என கருதுகின்றீர்?

·         நூலொன்றை அல்லது வேறேதேனுமொரு வெளியீடுகளைப் பிரசுரிப்பதற்காக  அலுவலகப் பதிவேடுகளைப் பரிசீலனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ உத்தேசிக்கும் அலுவலர்  ஒருவர்  அப்பதிவேடுகளுக்குப் பொறுப்பாக உள்ள நிறுவனத் தலைவரிடம் முன்னங்கீகாரத்தைப் பெறவேண்டும். சுரங்க என்பவர் தனது நிறுவனத் தலைவரிடமிருந்து அனுமதிபெறவேண்டும்

 

28. நூலொன்றை அல்லது வேறு ஏதேனும் பிரசுரங்களை வெளியிடுவதற்கு முன்கூட்டிய  அனுமதி யாரிடம் பெற வேண்டும்? சுரங்க யாரிடம் அனிமதி பெற வேண்டும்?

·         நூலொன்றை அல்லது வேறு ஏதேனும் பிரசுரங்களை வெளியிடுவதற்கு முன்னராக செயலாளரிடமிருந்து எழுத்து மூல அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அரச நிர்வாகச் செயலாளர் ஊடாக சுரங்க  பெற்றுக் கொண்ட அனுமதியின் அடிப்படையில்  புத்தகத்தை  சுரங்கிவினால் வெளியிடலாம்.

29. சுரங் இனது நாவலை வெளியிடுவற்கான முன் அனுமதியினை வழங்குவதற்காக விதிக்க முடியுமான நிபந்தனைகளைக் குறிப்பிடுக.

·         நூலின் சில பிரதிகளை அரசாங்க பயணுக்காக  இலவசமாக அல்லது தான் தீர்மானிக்கும் சலுகை விலையில் வழங்க வேண்டுமென்ற நிபந்தனையுடன் முன் அனுமதி வழங்க முடியும்.

இஇந்தஆக்கத்தின் 

      www.lankajobinfo.com/2021/03/ecpart1.html


   

      எமது  முநூல் குழுமம்


.f   www.facebook.com/LankaJobinfocom-157301272736519


எ       வட்சப் குழுக்கள்