1994 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க (திருத்தம்) நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய ஏதாவது அநீதி தொடர்பில் நபரொருவர் ஒம்புட்சுமானுக்கு நேரடியாக எழுத்தில் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு உரித்துடையவராவார். இவ்வலுவலகத்தினால் வழங்கப்படும் “ ஒஎம்பி -01” படிவத்தில் அவசியமான தகவல்கள் சமர்ப்பிக்கப்படுமானால் விசாரணை நடத்துவது வசதியாக இருக்கும். முறைப்பாடுகளை அலுவலகத்திற்கு வருகை தந்து சமர்ப்பிக்கலாம் அல்லது பதிவுத்தபால் மூலம் சமர்ப்பிக்கலாம் அல்லது சதாரண தபால் மூலம் சமர்ப்பிக்கலாம் அல்லது மின் அஞ்சல் செய்தி( E-Mail message) மூலம் சமர்ப்பிக்கலாம்.
அதேபோல், புலனாய்வு செய்து அறிக்கையிடும் பொருட்டு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, கௌரவ சபாநாயகர் ஊடாக பாராளுமன்ற உறுப்பினரொருவர் மூலம் பொதுமனுக்கள் குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகள் ஒம்புட்சுமானுக்கு குறித்துரைக்கப்படுகின்றது.
முறைப்பாடொன்றினுள் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கியமான விடயங்கள்
- முறைப்பாடு சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிமையான மொழியில் (சிங்களம்/தமிழ்/ஆங்கிலம்) முன்வைக்கப்படுதல் வேண்டும்.
- எத்தீர்மானத்துக்கு எதிராக முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் எவ்வலுவலருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படுகிறதோ அவ்வலுவலரின் பதவியையும் அலுவலக முகவரியையும் தெளிவாக குறிப்பிடுதல் வேண்டும்.
- இழைக்கப்பட்ட அநீதியை எண்பிப்பதற்கான முக்கியமான ஆவணங்களின் புகைப்பட பிரதிகளை இணைப்பது பொருத்தமானதாக இருக்கும்.
- உங்கள் முறைப்பாடு தொடர்பில் இறுதியில் நீங்கள் எதிர்பார்க்கும் குறைதீர்வை தெளிவாக குறிப்பிடுதல் வேண்டும்.