முறைப்பாட்டின் இயல்புக்கு ஏற்ப தாமதமின்று குறைதீர்வை வழங்குவதற்கு பின்வரும் முறையில் புலனாய்வை மேற்கொள்ளுவார்.
- முதல்படியாக கிடைக்கபெற்ற முறைப்பாடொன்று நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்தின் எல்லைக்குள் உள்ளடங்குகிறதா என தீர்மானம் எடுத்தல் வேண்டும்.
- அம்முறைப்பாடில் குறித்துரைக்கப்பட்ட விடயங்கள் இவ்வலுவலக எல்லைக்குள் உள்ளடங்குமானால் அவ்விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு எதிர்வாதியிடமிருந்து அறிக்கை கோரப்படும். வழமையாக ஏற்புடைய அறிக்கை சமர்ப்பிப்பதற்கு இரண்டு கிழமைகள் வழங்கப்படும்.
- அறிக்கையில் காணப்படும் விடயங்களை கவனமாக அவதானத்தில் கொண்டு அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். அறிக்கைகள் கோரப்பட்ட பின்னர் இழைக்கப்பட்ட அநீதிக்கான காரணம் சரிப்படுத்தப்பட்டால் முறைப்பாட்டாளருக்கு இவ்விடயம் உடனடியாக அறிவுறுத்தப்படும். அவ்வாறு சரிப்படுத்தப்படாதுவிட்டால், தேவைப்பட்டவாறு மேலும் கடிதங்கள் மூலம் விசாரணைகள் நடாத்தப்படும்.
- இவ்வாறு கடிதப்பரிமாற்றம் மூலம் முறைப்பாட்டாளருக்கு குறைதீர்வு வழங்கி இவ்வலுவலகத்திற்கு அலுவலர்கள் சமுகமளித்தலை இயலுமானவரையில் குறைக்கும் வகையில் சாத்தியமான முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
- முறைப்பாட்டாளருக்கு அநீதி இழைக்கப்படவில்லை என கடித தொடர்பில் எண்பிக்கப்பட்டால், இவ்விடயம் அதிகாரிகளுக்கும் முறைப்பாட்டாளருக்கும் அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- கடிதம் அனுப்புதல் மூலம் தீர்மானமொன்று எடுப்பது கடினமாக காணப்படுமிடத்து சகல குழுக்களுக்கும் விசாரணைக்காக அழைப்பாணை விடுக்கப்பட்டு இவ்விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்படும்.
- ஒம்புட்சுமானால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்/பரிந்துரைகள்/ஆலோசனைகள் முறைப்பாட்டாளருக்கும் ஏற்புடைய அதிகாரிகளுக்கும் எழுத்தில் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஒம்புட்சுமனால் எடுக்கப்பட்ட தீர்மானம்/பரிந்துரை/ஆலோசனையை குறிப்பிட்ட காலத்திற்குள் பிரதிவாதியை அமுல்படுத்துமாறு ஒம்புட்சுமான் கோருவார்.
- நிறுவனத்தலைவர் (அதிகாரம் பெற்ற அலுவலர்) கூறப்பட்ட பரிந்துரையை அமுல்படுதாவிட்டால், அவ்வாறு குறித்துரைக்கப்பட்ட காலத்தினுள், போதியதாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையாயின், ஏற்புடைய நிறுவனத்தலைவரினால் செய்யப்பட்ட அவதானிப்புக்கள் ஏதும் இருப்பின் அவற்றை சீர்தூக்கி பார்த்த பின்னர் ஒம்புட்சுமான் தமது பரிந்துரையுடன் இறுதி அறிக்கையை 1994 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க திருத்த சட்டத்தில் கூறப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அதிமேதகு சனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிப்பார்.
- சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய முறைப்பாட்டாளரொருவர் சட்டத்தரணியின் அல்லது பாதுகாப்பு அதிகாரியின் உதவியைப் பெறுதல் அனுமதிக்கப்படமாட்டாது. எவ்வாறாயினும் முறைப்பாட்டாளர் உடல் அல்லது இனங்காணக்கூடிய தளர்ச்சிக்கு உட்பட்டிருப்பின் தனது உதவியாளரின், உறவினரின் அல்லது ஆதரிப்பாளரின் உதவியை ஒம்புட்சுமானின் விருப்பத்துடன் பெற்றுக்கொள்ளலாம்.
- முறைப்பாட்டின் இயல்பு மற்றும் பிரதிவாதியினால் வழங்கப்படும் பதில் என்பவற்றுக்கு அமையவே குறைதீர்வு வழங்கும் கால அளவு அமைந்திருக்கும். பிரதிவாதி தாமதமின்றி அறிக்கை சமர்ப்பிப்பாரானால் இடருற்றவருக்கு விரைவில் குறைதீர்வு வழங்குவதற்கு உதவியாக இருக்கும். எவ்வாறாயினும் முறைப்பாட்டை கோவையிட்ட திகதியிலிருந்து மூன்று மாத காலங்களினுள் பரிந்துரைகளை வழங்குவதற்கு முயற்சி எடுக்கப்படும். எனினும் முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட திகதியிலிருந்து ஒரு வருட காலத்தினுள் இறுதித் தீர்மானத்தைப் பெற்றுக்கொள்ள தீவிர முயற்சி எடுக்கப்படுகிறது.
(ஒம்புட்சுமான் அலுவலகம் வருடாந்த செயல்திறன் அறிக்கை -2019 இலிருந்து பெறப்பட்டது)
இவ்வலுவலகத்தால் பெறப்படும் ஒவ்வொரு முறைப்பாடும் ஓர் தனி பதிவேட்டில் பதியப்படுகிறது. ஒவ்வொரு முறைப்பாட்டுக்கும் விசேட இலக்கம் வழங்கப்படுகிறது. அதன் பின்னர் முறைப்பாடுகள் ஓய்வூதியம், விதவைகள் அநாதைகள், சம்பள முரண்பாடுகள் சம்பள உயர்வுகள், பதவி உயர்வுகள் காணி, அதிகாரமளிக்கப்படாத நிர்மாணங்கள் சேவை முடிவுறுத்தல், பதவியில் மீளஅமர்த்தல், பல்கலைக்கழக | பாடசாலை அனுமதி, அதிகார துஷ்பிரயோகம் என்பன போன்ற விடயங்களுக்கு அமைய வகுக்கப்படுகின்றன. அவை குறிப்பிட்ட விடயங்களாக ஒதுக்கப்பட்டு இவ்வலுவலகத்தின் அலுவலர்களால் நிர்வாகிக்கப்படுகிறன. அவ்வலுவலர்கள் அரசாங்கசேவையின் “அரசாங்க சேவை அலுவலர்" வகுதியினரை சேர்ந்தவர்களாகும் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதும் அம்முறைபாடு ஏற்புடைய அரசாங்கசேவை அலுவலருக்கு (விடய எழுதுநர்) அனுப்பப்படும். அதன்பின்னர் அவர்கள் ஒவ்வொரு முறைப்பாட்டுக்கும் ஒரு கோவையை திறப்பார்கள் விடய தலைப்பு தெரிவானது அலுவலகத்தின் பிரதம அரசாங்க சேவை அலுவலரால் மேற்கொள்ளப்படுகிறது.