ad

2023 ஆம் ஆண்டு முதல் கபொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களுக்கு 80% வருகை கட்டாயமாகும்

 2022 ஆம் ஆண்டில் க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கு மாத்திரம் 80% வரவினை உறுதி செய்வது அவசியமில்லை என்பதாக ED/09/ADS(SA)/7 இலக்கமிடப்பட்ட 2022.08.12 ஆம் திகதி கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டில் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மாத்திரமே இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதாகவும். 2023 ஆம் ஆண்டு முதல் உயர் தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கு 60% வரவினை உறுதிப்படுத்துவது கட்டாயமானதாகும் என்பதாக 2022.11.28 ஆம் திகதி கல்வி அமைச்சினால் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.