>
Principal Hand book Chapter 4
பாடசாலையின் நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக உரிய கால எல்லைக்குள் நடைமுறையிலுள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை விளைதிறன்மிக்க வகையில் முதலீடு செய்வதற்கான மூலோபாயங்களை தீர்மானித்து பாடசாலையின் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.
அதன்போது தேசிய கல்விக் கொள்கைகள், கல்விக் குறிக்கோள்கள் மற்றும் பொதுத் தேர்ச்சிகள், சர்வதேச இணக்கப்பாடுகள் மற்றும் போக்குகள், காலத்திற்கேற்ற தேசிய கொள்கைகள் மற்றும் பொதுக் கல்விக்கென தற்போது தயாரிக்கப்பட்டுள்ள கல்வி துறைசார் அபிவிருத்திச் சட்டகம் என்பனவற்றை அடிப்படையாகக் கொள்ளுதல் வேண்டும்.
அதைப் போன்றே, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள பாடசாலைத் திட்டமிடல் செயன்முறை தொடர்பான வழிகாட்டலை பின்பற்ற வேண்டும்.
பாடசாலை திட்டமிடல் செயன்முறையின்போது முதலாவது படிமுறையாக அமைய வேண்டியது செயல்நிலை ஆய்வாகும். இதன்போது பாடசாலையின் தற்போதைய நிலை, பிரச்சினைகள் மற்றும் சமூகத்தின் குறிக்கோள்கள் தொடர்பாக ஆய்வுரீதியாக கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
கீழ்க்காணும் தலைப்புகளின் கீழ் பகுப்பாய்வு செய்வதினூடாக தற்போதைய நிலை மற்றும் பிரச்சினைகள் தொடர்பான தெளிவினை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கு மேலதிகமாக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக கவனஞ் செலுத்த வேண்டும்:
பாடசாலையை தற்போதுள்ள மட்டத்திலிருந்து எதிர்காலத்தில் அடைந்து கொள்ள எதிர்பார்க்கும் மட்டத்தைத் தீர்மானிக்க வேண்டும். அவ் எதிர்பார்க்கும் மட்டத்திற்கு அண்மித்தலுக்காக பாடசாலையின் தூர நோக்கு, பணிக்கூற்று மற்றும் நோக்கங்களுக்கு அமைவாக திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.
"தூரநோக்கு'' எனப்படுவது பாடசாலை எதிர்காலத்தில் அடைந்து கொள்ள வேண்டிய குறிக்கோள்களையும் அண்மிக்க வேண்டிய பண்புத் தர நிலை தொடர்பான பொது நிலையையும் பிரதிபலிக்கும் அர்த்தபூர்வ வெளிப்படுத்தலாகும்.
தூர நோக்கைத் தயாரிக்கும்போது கீழ்க் காணப்படும் விடயங்கள் தொடர்பாக விசேடமாக கவனஞ் செலுத்தப்பட வேண்டும்:
பாடசாலையின் தூர நோக்கை அடைந்து கொள்வதற்கென பாடசாலையின் பங்குத்தாரர்களினால் நிறைவேற்ற வேண்டிய ஒட்டு மொத்த பணிகள் பணிக் கூற்றினுள் கட்புலனாக வேண்டும். அதில் பல்வேறு உபாயங்கள், ஏற்றத்தாழ்வுகள் என்பனவற்றை நடைமுறைப்படுத்துதல் மற்றும் எதிர்கால நிறைவு தொடர்பாக குறிப்பிடப்பட வேண்டும்.
பணிக் கூற்றைத் தயாரிக்கும் போது கீழ்காணப்படும் விடயங்களின்பால் கவனஞ் செலுத்த வேண்டியுள்ளதோடு இதனூடாக பாடசாலையின் ஒட்டுமொத்த செயற்பாடுகளின் சுருக்கமான கருமூலம் விபரித்துக் காட்டப்படுதல் எதிர்பார்க்கப்படுகின்றது.
உதாரணம் - 01
தூரநோக்கு: "நற்பண்புகளை மாதிரியாகக் கொண்ட சமூகத்தின் தலைமைத்துவ சிறப்பியல்புகளுடன் கூடிய சிறார்கள்"
பணிக்கூற்று: "இலங்கை நாட்டின் கலாசாரம் மற்றும் தேசிய தனித்துவம் என்பனவற்றை பாதுகாக்கக் கூடிய தேர்ச்சிகளைக் கொண்ட சமநிலை ஆளுமைகளுடன் கூடிய சிறார்களை உருவாக்குதல்"
உதாரணம் - 02
தூரநோக்கு: "எல்லா வகையிலும் சமநிலை ஆளுமையுடன் கூடிய எதிர்கால வேலையுலகிற்கு பொருந்தும் குழுவினரை சமூகத்திற்கென உருவாக்குதல்."
பணிக்கூற்று: "தேசிய கல்விக் குறிக்கோள்களுக்கு இணங்க பூரண கலைத்திட்டத்தை அமுல்படுத்தி பிள்ளைகளின் மறைந்துள்ள ஆற்றல்களை உயர்வான மட்டத்திற்கு அபிவிருத்தி செய்யக் கூடிய, கலாசாரங்களுக்கு மதிப்பளிக்கும் மற்றும் விழுமியங்களைப் பாதுகாக்கும் குழுவினரை உருவாக்குவதற்காக வினைத்திறன் மற்றும் விளைதிறன்மிக்க நிறுவனமாக பாடசாலையை அபிவிருத்தி செய்தல்"
கீழ்க் காணப்படும் விடயங்களைக் கருத்தில் கொண்டு பாடசாலையின் குறுங்கால மற்றும் நீண்ட கால குறிக்கோள்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
குறிக்கோள் ஒன்றை உருவாக்கும்போது கீழ்க் காணப்படும் விடயங்கள் தொடர்பாக கவனஞ் செலுத்தப்பட வேண்டும் (SMART):
பாடசாலையொன்றின் திட்டமானது கல்வியில் அளவு ரீதியான, பண்பு ரீதியான மற்றும் கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்தி இலக்குகளை நிறைவேற்றுவதன் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும். திட்டம் தயாரித்தலானது பங்கேற்றல் செயற்பாடாக அமைய வேண்டும். பாடசாலை சமூகத்தின் கருத்துகளைப் பெற்றுக் கொள்ளுதலும் அக் கருத்துகளை பகுப்பாய்வு மற்றும் முன்னுரிமைப்படுத்தலின் மூலம் பொருத்தமான வேலைத்திட்டங்களை தயாரித்து உள்ளடக்குதல் முக்கியமாகும்.
திட்டம் தயாரிக்கும் போது கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள் தொடர்பாக கவனஞ் செலுத்தப்பட வேண்டும்:
கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்படும் வழிகாட்டல்களுக்கு இணங்க அனைத்து பாடசாலைகளும் இடைக் காலத் திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டும். நடப்பு வருடத்திலிருந்து அடுத்த ஐந்து வருடங்களில் உத்தேச நோக்கங்களை அடைந்து கொள்வதற்தாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பிரதான செயற்பாடுகளை அதில் உட்படுத்த வேண்டும்.
இடைக்காலத் திட்டத்தைத் தயாரிப்பதால் பாடசாலையில் நடைமுறையிலுள்ள தற்போதைய போக்குகளுக்கு வருடாந்தம் ஏற்படும் அழுத்தங்கள் தெளிவுப்படுத்தப்படுவதோடு அதற்கிணங்க முன்னோக்கிய திட்டத்தைத் தயாரிப்பதற்கு அது வழி வகுக்கும். இத் திட்டமானது வருடா வருடம் தற்காலப்படுத்தப்படும் புரழ்வுத் திட்ட (Rolling Plan) முறையை கொண்டதாகும்.
இடைக்காலத் திட்டமொன்றில் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்:
இடைக் காலத் திட்டத்திற்கிணங்க உரிய வருடத்தினுள் நடைமுறைப்படுத்தவதற்கு எதிர்பார்க்கும் செயற்பாடுகளை இனங்கண்டு வருடாந்த திட்டம் அதாவது இடைக் காலத்திட்டத்திற்கமைவாக உரிய வருடத்திற்கான செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமான ஆவணமொன்றை தயாரித்தல் வேண்டும். அவ் வருடத்திற்குரிய வரவு செலவு மதிப்பீட்டை இதனுடன் இணைந்ததாக தயாரிக்க வேண்டும். விசேட சந்தர்ப்பங்களில் முன் அனுமதியுடன் வருடாந்த செயற்பாட்டுத் திட்டம் மற்றும் நிதி மதிப்பீடு என்பனவற்றை திருத்தம் செய்து கொள்ள முடியும்.
வருடாந்த திட்டமொன்றில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள்:
திட்டம் தயாரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளுதல் தொடர்பாக அளவீடு செய்தலுக்கான சுட்டிகளைத் தயாரிக்க வேண்டும்.
பாடசாலை நாட்காட்டி எனப்படுவது கல்வி அமைச்சு, மாகாணக் கல்வித் திணைக்களம், வலயக் கல்விப் பணிமனையினால் அறிவிக்கப்படும் பல்வேறு தினங்கள்/ வேலைத்திட்டங்கள் தொடர்பாக கவனஞ் செலுத்தி அதனுடன் பாடசாலை வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்திற்கு இணைந்ததாக அவ் வருடத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் தினங்களை திட்டவட்டமாக உள்ளடக்கி தயாரிக்கப்படும் ஆவணமாகும்.
பாடசாலை திட்டம் தயாரிக்கப்பட்டதன் பின்னர், உரிய தரப்பினருக்குத் தெளிவுப்படுத்தி காலத்திற்குக் காலம் வெளியிடப்படும் பாடசாலைத் திட்டம் மற்றும் நிதி சுற்றுநிருபங்களில் காட்டப்பட்டுள்ளவாறு உரிய அங்கீகாரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்கிணங்க ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாத இறுதிக்கு முன் அடுத்த வருடத்திற்கான வரவு செலவு ஆவணங்களை உள்ளடக்கிய வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 15 ஆந் திகதிக்கு முன்னர் விசேட பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக் கூட்டத்தை கூட்டி ஒப்புதலைப் பெற்றுக் கொண்டு நவம்பர் 30 ஆந் திகதிக்கு முன்னர் மாகாணக் கல்விப் பணிப்பாளர்/வலயக் கல்விப் பணிப்பாளர்/ கல்வி அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டு செயற்படுத்துதல் வேண்டும்.
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு மற்றும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களால் திட்டங்களில் இனங்காணப்பட்ட மூலோபாயங்கள் மற்றும் செயற்பாடுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதைப் போன்றே அது தொடர்பான முன்னேற்றத்தை கண்காணித்தலை மேற்கொள்ளுதல் வேண்டும்.
இக் கண்காணிப்பானது தொடர்ச்சியான செயற்பாடாக இருக்க வேண்டியதோடு கண்காணிப்பின் தகவல்களின் அடிப்படையில் திட்டத்தை அமுல்படுத்துதல் தொடர்பாக பரிகார முறையியலை நடைமுறைப்படுத்த வேண்டும்.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள பாடசாலை திட்டமிடல் செயன்முறை தொடர்பான வழிகாட்டி கோவை (2013), பொதுக் கல்வி தொடர்பான இடைக் காலத் திட்டம் 2018-2025 மற்றும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 26/2018 பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்பு ரீதியான அளவு ரீதியான, கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்திக்கான திட்டமிடல்கள் மற்றும் பெறுகைச் செயற்பாடுகள் தொடர்பான சுற்றுநிருபம் மற்றும் வழிகாட்டி கைந்நூலை பரிசீலனை செய்க.
பாடசாலையொன்றில் கீழ்க் காணப்படும் செயற்பாடுகளாவன வியூக நடவடிக்கைகளாகக் கருதப்படுகின்றது.
பாடசாலையொன்றில் மேல் குறிப்பிடப்பட்ட பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சந்தர்ப்பங்களில் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் முன்மொழிவுகளை ஒப்புதல் செய்து கொண்ட பின் உரிய அறிக்கையையும் கையொப்பப் படிவம் உட்பட தேவைப்பாடு தொடர்பாக அதிபரால், தேவையான சந்தர்ப்பங்களில் கோட்டக் கல்விப் பணிப்பாளரின் சிபாரிசுடன் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கோரிக்கை ஒன்றை முன்வைக்க வேண்டும்.
அம் முன்மொழிவை முதலில் வலய வியூகக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டதன் பின் மாகாண வியூக குழுவிற்கு சமர்ப்பித்து சிபாரிசைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
மாகாணப் பாடசாலையெனில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினாலும், தேசிய பாடசாலையெனில் கல்வி அமைச்சின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் வலயக் கல்விப் பணிப்பாளரால் நிலையியல் கட்டளையொன்றை வழங்கி உரிய மாற்றம் முன்னெடுக்கப்படும்.
0 Comments