புதிய கல்வி மறுசீரமைப்பின் முதலாவது கட்டமான நிர்வாகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படுகின்ற மாற்றங்கள் தொடர்பில் அறிமுகப்படுத்துவதற்கான ஊடகச் சந்திபொன்றில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த பல கருத்துக்களை முன்வைத்தார். கடந்த காலங்களில் பல்வேறுபட்ட அனரத்தங்கள் மற்றும் பொருளாதார பின்னடைவுகள் என்பவற்றினால் கல்விக் கட்டமைப்பானது இரண்டு வருடங்களாகப் பாதிப்புக்குள்ளாகியது எனவும் அவற்றை சீர் செய்வதற்காக சிறுவர் நேயப் பிரதேசமாக பாடசாலைகளை மாற்றியமைப்பதற்காக தான் கடந்த சில மாதங்களாக பல விதமான செயற்பாடுகளை மேற்கொண்டதாகத் தெரிவித்தார். அத்துடன் நாட்டினைக் கட்டியெழுப்புவதாயின் அது கல்விக் கட்டமைப்பினை சரி செய்வதன் ஊடாக மாத்திரமே சாத்தியப்படுத்த முடியும் என்பதாகவும் இந்த நடவடிக்கைகளுக்கான ஆரம்பகட்ட முன்னெடுப்புக்கள் தற்போது நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் தெரிவித்த கருத்துக்கள் விபரம் கீழே தரப்படுகின்றது.
01. இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 800 வெற்றிடங்களும் 5800 அதிபர் வெற்றிடங்களும் 35, 000 ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுகின்ற நிலையில் 2023 ஆம் ஆண்டு அவைகளுக்கு நியமனம் வழங்கல்
தற்போது காணப்படுகின்ற நிர்வாகப் கட்டமைப்பில் ஆளணி தொடர்பான பிரச்சினையினையினை வெகு விரைவிலேயே எதிர்நோக்க வேண்டி நிலை காணப்படுகின்றது. கல்வி நிர்வாக சேவையில் தற்போது காணப்படுகின்ற 622 வெற்றியடங்கள் இந்த வருடத்தின் ஓய்வு பெறுகின்றவர்களின் தொகையுடன் சேர்த்து 800 ஆக உயர்வடைகின்றது. அத்துடன் தற்போது நடைபெறுகன்ற வழக்கினை மத்திஸ்தம் செய்துகொள்வதன் ஊடாக 5800 அதிபர் நியமனங்கள் வழங்குவதற்கும் 26,000 பயிலுனர் பட்டதாரிகளுக்கு அசிரியர் நியமனம் வழங்குவதற்கும் மேலும் கல்வியியல் கல்லூரியிலிருந்து வௌியாகியுள்ள 6000 பேர்களுக்கு ஆசியர் நியமனம் வழங்குவதன் ஊடாக 35000 பேர்களை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
02. பயிலுனர் பட்டதாரிகள் 22000 பேர்களையும் ஏனைய பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்காக பரீட்சை நேர்முகப் பரீட்சை என்பன நடாத்தி 3 வருட காலத்துக்குள் கல்வியியல் பட்டப் பின்படிப்பினைப் பூர்த்தி செய்யச் செய்தல். மற்றும் கஷ்டப் பகுதி ஆசிரியர்களுக்கு கிட்டிய இடங்ளுக்கு இடமாற்றம் வழங்குதல்
அன்மைக் காலங்களில் பாடசாலைகளுக்காக நியமிக்கப்பட்ட பயிலுனர் பட்டதாரிகள் 22,000 களுக்கும், கல்வித் தரம் கூடியதாக இருந்தும் குறைந்த கல்வித் தகைமைகளுக்குரிய தொழில்களில் இருக்கின்ற பட்டதாரிகளுக்கும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய பட்டம் ஒன்றினைப் பெற்றுள்ள எந்த ஒரு பட்டதாரிக்கும் குறித்த வயது மட்டத்தில் அனைவருக்கும் தோற்ற முடியுமான அடிப்படையில் பரீட்சை ஒன்றினை நாடளாவிய ரீதியில் நடாத்தி அதில் அதிக புள்ளிகளைப் பெறுகின்றவர்களை நேர்முகப் பரீட்சைக்கு உட்டுத்தி விண்ணப்பதாரிகளின் விருப்பம் மற்றும் காணப்படுகின்ற வெற்றிடங்கள் என்பவற்றின் அடிப்படையிலும், நியமனம் பெற்று 3 வருட காலப் பகுதிக்குள் தேசிய கல்வி நிறுவனத்தில் கல்வியியல் பட்டப் பின் படிப்பு டிப்லோமாவினைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலும் அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன் கஷ்டப் பகுதிகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களுக்கு அவர்களுக்களது சொந்த இடங்களில் பணி புரிவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் குறித்த நியமனங்கள் ஊடாக ஆசிரியர் ஆலோசகர் சேவைகளின் வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்பட்டு கல்வி நிர்வாகக் கட்டமைப்பில் ஓய்வு பெறுகின்றவர்களுக்கான பிரதியீடுகள் மேற்கொள்ளப்படும் என்பதாகக் குறிப்பிட்டார்.
03. கல்வி டிஜிடல் மயமாக்கலும் வலையமைப்பாக்கலும் என்ற திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு இணைய வசதி வழங்கல் ஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுடப பயிற்சி வழங்கல்
ஆளனி தொடர்பான வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்ன அடுத்த கட்டாக கல்வித்துறையானது வலையமைப்பாக்குதல் மூலமாக டிஜிடல் மயமாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் இலங்கையில் காணப்படுகின்ற 100 கல்வி வலையங்களில் தற்போது இயங்கி வருகின்ற 86 கணனி வள நிலையங்களுடன் மேலும் 14 வள நிலையங்கள் அமைக்கப்படவிருப்பதாகவும். இந்த 100 கணனி வள நிலையங்கள் ஊடாக ஆசிரியர்களுக்கு தகவல் தொழில் நுட்பம் தொடர்பான பயிற்சியிளை வழங்கவிருப்பதாகவும், 1000 மில்லியன் ரூபா செலவில் 1000 பாடசாலைகளுக்கு இணையவசதி வழங்குதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்தச் செயற்பாடுகளுடன் தற்போது காணப்படுகின்ற 100 கல்வி வலையங்கரளை 120 ஆக அதிகரிக்க இருப்பதாகவும் தற்பேது காணப்படுகின்ற 312 கோட்டக் கல்விக் காரியாலங்களை பாடசாலை அபிவிருத்தி சபைகளாக மாற்றியமைத்து அவற்றை 550 ஆக அதிகரிக்கச் செய்வது, பாடசாலைகளைக் கண்காணிக்கின்ற நடவடிக்கையினை அவற்றினது பிரதான பணியாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெறுகின்றவர்களை ஆசிரியர்பளாக இணைத்துக்கொண்டு ஏனையவர்களை பாடசாலையின் காரியாலயம் சார்ந்த செயற்பாடுகளுக்கு நியமிப்பதாகவும் அவர்களின் பங்களிப்புடன் பாடசாலை அபிவிருத்தி சபைகளின் ஊடாக பாடசாலை வருட இறுதி வகுப்பு நிலைகளை கணிப்பீடு செய்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாவும், இவைகளுக்காக கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் போன்றோரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என்பதாகவும் இந்த நடவடிக்கைகளில் அதிபர்களும் பங்குகொள்வர் என்பதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
4. இலங்கையில் காணப்படுகின்ற பாடசாலைகளில் 6 முதல் 10 பாடசாலைகள் உள்ளடங்குகின்ற விதத்தில் பாடசாலைத் தொகுதிகளை அமைத்தல்
இங்கு குறிப்பிடப்பட்ட பாடசாலை அபிவிருத்தி சபைகள் 550 இன் கீழ் பாடசாலைத் தொகுதிகள் 1200 உள்ளடக்கப்படவிருப்பதாகவும் இந்த ஒவ்வொரு தொகுதிக்கும் 6 முதல் 10 வரையான பாடசாலைகள் உள்ளடக்கப்படுவதாகவும் அதில் ஒன்று அல்லது இரண்டு முதன்மையான பாடசாலைகள் உள்ளடக்கப்படுவதாகவும் இந்த ஒன்று அல்லது இரண்டு பாடசாலைகளும் பெரும்பாலும் தேசிய பாடசாலையாகவோ அல்லது வளங்கள் போதுமான அளவில் காணப்படுகின்ற மாகாணப் பாடசாலையாகவோ அமையும் என்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் தேசிய பாடசாலை முறை என்பது சமூக பாரபட்சம் என்பதனை உருவாக்குவதற்கு காரணமாக அமைவதனால் தேசிய பாடசாலை முறையினை நீக்கி மிகவும் வினைத்திறன் மிக்கதும் சமத்துவம் மிக்கதுமான முதனமைப் பாடசாலை முறை ஒன்றினை அமைத்து அதன் அடிப்படையில் தேசிய பாடசாலைகளை உள்வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாககவும் குறிப்பிட்டார். மாகணப் பாடசாலைகள் எதனையும் இதன் பின்னர் தேசிய பாடசாலைகளாக மாற்றியமைக்காது தற்போது காணப்படுகின்ற தேசிய பாடசாலைகளை தொடர்ந்து அபிவிருத்தி செய்து எதிர்காலங்களில் இணைய வததிகள் வழங்கப்படுகின்ற 1000 பாடசாலைகளுடன் இணைத்து அவற்றை முதன்மைப் பாடசாலைகாளாக மாற்றப்படுவதாகவும் தற்போதளவில் இணைய வசதிகள் காணப்படுகின்ற பாடசாலைகளுடன் எதிர்காலத்தில் இணைய வசதிகள் வழங்கப்படுகின்ற பாடசாலைகளும் இணையும் போது சுமார் 1200 பாடசாலைகளுகள் இதில் உள்ளடங்குவதாகவும் குறிப்பிட்டார்.
05.தேபடசாலைகளுக்கான வளப் பகிர்வு
இந்த முதன்மைப் பாடசாலைகள் திட்டத்தின் மூலமாக குறித்த 6- 10 வரையயான பாடசாலைகளை உள்ளடக்குகின்ற பாடசாலைத் தொகுதியில் காணப்படுகின்ற வளங்கள் குறைந்த எந்தப் பாடசாலையோ அல்லது மாணவர்களோ எதிர்காலத்தில் இருக்கமாட்டார்கள் என என்பதாகவிம் மேற்படி தொகுதிகளாக்குகின்ற முறையின் ஊடாக வளங்கள் மத்தியமயமாக்கப்பட்டு அவைகள் பயன்படுத்தப்படுகின்ற முகாமைத்துவ முறைகளின் ஊடாக வளங்களை வினைத்திறனாக பயன்படுத்த முடியுமான நிலை உருவாகும் என்பதாகவும், வளங்கள் போதுமான அளவு காணப்படுகின்ற பாடசாலைகளின் ஊடாக வளங்கள் பற்றாக்குறையாகக் காணப்படுகின்ற பாடசாலைகள் பராமரிக்கின்ற கோட்பாடு ஒன்றினை இத்திட்டத்துடன் இணைக்கவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறான சக்திவாய்ந்த நிர்வாகக் கட்டமைப்பொன்றினை கல்வித் துறையில் ஏற்படுத்துவது கல்விப் புரட்சியின் ஆரம்ப அத்திவாரமாக அமையப் போகின்றது என்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சில் நிருவப்பட்டுள்ள தேசிய கல்விச் சீர்திருத்த நிலையத்தினைப் (NERC) போன்ற 9 நிலையங்களை அனைத்து மாகாணங்களிலும் அமைத்து அவைகள் ஊடாக பாடசாலைத் தொகுதிகளின் தரவுகளை கண்காணித்து அனைத்து பாடசாலைகளின் தரவுகளையும் ஒரே வலையமைப்பில் நிர்வகிப்பதற்கு முறையான செயற்பாடு ஒன்று அமைக்கப்படுவதாகவும் அவைகளின் ஊடாக மாணவர்கள் ஆசிரியர்கள் போன்றோரின் தகவல்களை வேறு வேறாக உட்படுத்தி ஆசிரியர் இடமாற்றம் போன்ற செயற்பாடுகளை வலையமைப்பின் ஊடாக வௌிப்படையாகவும் விரைவாகவும் செயற்படுத்த முடியுமாக அமையும் என்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
06. பரீட்சை முறைக்குப் பதிலாக மொடியூல் முறை அறிமுகப்படுத்தல்.
அத்துடன் தகவல் தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை வழங்குகின்ற ஸ்டெம்/ ஸ்டிம் கல்வி முறையினை அறிமுகப்படுத்துவதற்காக அந்தத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வதாகவும், பாடசாலைக் கல்வி தொழில்க் கல்வி என்பவற்றை ஒன்றாக நடாத்திச் செல்லவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டு முதல் பாடசாலை வகுப்பறைகளில் பொதுவான கற்பித்தல் முறையுடன் மொடியூல் முறையினை தரம் 01 , 06 , 10 ஆகிய வகுப்புக்களுக்கு அறிமுகப்படுத்வைதுடன் பரீட்சார்த்த திட்டமாக இதனை 200 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்துவதாகவும் 2024 ஆம் ஆண்டில் அதனை நாடு முழுவதிலும் காணப்படுகின்ற பாடசாலைகள் அனைத்துக்கும் அவற்றின் அனைத்து வகுப்புக்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படவிரு்பதாகவம் அமைச்சர் தெரிவித்தார். இதன் ஊடாக பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக படிவங்கள் அமைப்பிலான ஒப்படைகள் வழங்கப்பட்டுவதுடன் இதன் பயளனாக வருட இறுதியில் மதிப்பீட்டு நடவடிக்கைகளிளால் இன்னல்களுக்கு உள்ளாகின்ற தன்மையினை இல்லாமலாக்கி ஆசிரியர் படிவங்கள் பூர்திசெய்கின்ற முறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்பதாகவும் தெரிவித்தார். 2029 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 5 கட்டங்களில் பரீட்சைகளின் பாரத்தினைக் குறைத்து வகுப்பறை மதிப்பீட்டு முறைக்கு முன்னுறிமை கிடைக்கப்பெறும் என்பதாகவும் கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக அசியா வங்கியின் மூலமாக 1400 மில்லியன் ரூபா வீதம் தொடர்ந்து 4 வருடங்களுக்கு தொடராக நிதியுதவி கிடைக்கப்பெறும் என்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
07. சாதாரண பரீட்சை ஏப்ரல் அல்லது மே மாதத்தில்
அடுத்து வருகின்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சை என்பவற்றை குறிப்பிட்ட காலத்தில் நடாத்துவதுடன் சாதாரண தரப் பரீட்சையினை ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே மாதம் அரம்பத்தில் நடாத்துவதன் ஊடாக விடுமுறைகளை குறைத்து பாட விதானத்தினை பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதாகக் குறிப்பிட்டார்.
08. ஜனவரி மாதம் முதல் மாணவர்களுக்கான உள விருத்தி நிகழ்ச்சிகள்
அத்துடன் அடுத்த வருடத்தில் காலை 7.30 முதல் 7.40 வரை மாணவர்களின் உள விருத்திக்கான பயிற்சி வழங்கும் செயற்பாடுகளை ஒவ்வொரு வாரத்திலும் நடாத்துவதறன் ஊடாக கல்வித் துறையின் விருத்தி செய்வதற்கு பௌத்த கொள்கைகளை முதன்மையாகக் கொண்டு அனைத்து மதங்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அடிப்படையில் நடாத்தப்படுவதுடன் குறித்த அனைத்து நிகழ்ச்சிகளும் கல்வி அமைச்சின் மத மற்றும் விழுமியங்கள் தொடர்பான பிரிவின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பாடசாலைகளை ஆக்கிரமித்திருக்கும் போதைப் பொருள் அனர்த்தத்தினை வெற்றிகொண்டு நாட்டின் ஒழுக்கத்தினைக் கட்டியெழுப்புவதற்கும் இந்த வகையான நிகழ்ச்சிகள் உதவியாக அமையும் என்பதாகக் குறிப்பிட்டார். தற்போதளவில் கொழும்புப் பிரதேசத்தில் சுகாதார, பொலிஸ், கல்வி போன்ற துறைகளும் சர்வதேச அமைப்புக்களுடன் இணைத்து போதைப் பொருளிளை ஒழிப்பதற்கான நடவடிக்ககைகளை ஆரம்பித்திருப்பதாகவும் ஜனவரி மாதமளவில் வலய மட்டத்தில் நிருவப்படுகின்ற குழுக்களின் ஊடாக பரந்த அளவிலான போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபடவிருப்பதாகவும். ஆசிரியர் அதிபர் மற்றும் சமூகப் பங்களிப்புடன் இந்த செயற்திட்டம் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாகவும் தெரிவித்தார்.
மாணவர்களின் 5% ஆனவரடகளுக்கு பகலுணவும் சீருடையும் வழங்கி பாடப் புத்தகங்களை உரிய நேரத்தில் வழங்குவதுடன் அப்பியாசப் புத்தகங்கள் வாங்குவதற்கு வசதியற்றவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்கள் வழங்கி அடுத்த வருடத்தில் இந்த கல்வி சீர்திருத்தத்தின் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள ஆவணங்களைப் பார்வையிடவும் பொதுமக்கள் கருத்துக்களைத' தெரிவிக்கவும் கீழ்க்குறிப்பிடும் லிங்கில் பிரவேசிக்கவும்.