அனைத்து பாடசாலைகளும் ஜூலை 25ஆம் தேதி மீண்டும் ஆரம்பம்
பாடசாலைகளை நடத்துவதற்கான ஆலோசனைகள் வெளியிடப்பட்டது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் என்பன மீள ஆரம்பிப்பதற்கான தினம் பிற்போடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் அனைத்து பாடசாலைகளும் ஜூலை மாதம் 25ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பாக விசேட ஆலோசனை கோவை ஒன்று அதிபர்கள் கல்வி காரியாலய உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது .