திட்டமிட்ட அடிப்படையில் எரிபெருள் நாட்டுக்கு கிடைக்கப் பெறாமையினால் அத்தியாவசிய விடயங்களுக்கு மாத்திரம் எரிபொருள் வினியேகத்தினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (25) ஆம் திகதி டுவிட்டரின் ஊடாகவே அமைச்சர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். அடுத்த எரிபொருள் தொகை கிடைக்கப்பெறும் வரை பொது போக்குவரத்து, மின்சாரம், கைத்தொழில் போன்ற நடவடிக்கைகளுக்காக மாத்திரமே விநியோகிக்க இருப்பதாக அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
எதிர்வருகின்ற வாரத்தில் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்க இருப்பதனால் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த வாரம் நாட்டுக்கு கிடைக்கப் பெறுவதற்காக இருந்த பெட்ரோல் டீசல் மசாஜ் எண்ணெய் ஓடர்கள் தொடர்பிலான வங்கி நடவடிக்கைகளில் சில சிக்கல்கள் ஏற்பட்டதனால் உரிய நேரத்தில் அவைகளை அனுப்பிவைக்க முடியாது என வழங்குனர்களால் தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் எரிபொருள் தாங்கிய அடுத்த கப்பல் எந்த தினத்தில் இலங்கையை வந்தடையும் என்பது குறித்து எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் குறிப்பிட முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த மசகெண்ணெய் கப்பல் வரும் வரையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதாகவாம். ஏற்பட்ட சங்கடங்களுக்கு தான் மன்னிப்பு ககோருவதாகவும் காஞ்சனா விஜேசேகர டுவிட்டர் செய்தியில் தெரிவித்திருக்கின்றார்.
இந்த நிலையில் கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல எரிபொருள் சேமிப்பகங்களில் எரிபொருள் விநியோகம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறுத்தப்பட்டிருப்பதாக எரிபொருள் கொள்கலன் வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
அதன் அடிப்படையில் இந்த நேரம்வரையில் எந்த விதமான ஓடர்களும் பதிவு செய்யப்படவில்லை என்பதாக அந்த சங்கம் தெரிவித்தது.
அடுத்த எரிபொருள் எப்போது இலங்கைக்கு வரும் என்பது குறித்து தமக்குத் தெரியாது என்பதாக எரிபொருள் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.