ad

அரச உத்தியோகத்தர்கள் தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு வழங்கக் கூடாது .



அரச உத்தியோகத்தர்கள் வௌிநாடு செல்வது தொடர்பில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான அமைச்சே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என்பதானால் தங்களது தகவல்களை  வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு வழங்கக் கூடாது என்பதாகவும் அரச சேவைகளின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தரிவித்தாக திவய்ன பத்திரிகை செய்தி வௌியிட்டிருக்கின்றது. 

அரச சேவைகள் தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்கின்ற பொறுப்பு அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான அமைச்சிடம் காணப்படுவதனால் தாபன விதிக் கோவை மற்றும் சுற்றுநிருபங்களின் பிரகாரமே உத்தியோகத்தர்கள் செயற்படவேண்டியிருப்பதாக திரு மாயதுன்ன தெரிவித்தார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்புக்களை எதிர்பார்க்கின்ற அரச உத்தியோகத்தரிகளின் தகவல்களை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு வழங்குமாறு தொழில் மற்றும் வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் அறிவித்திருந்த போதிலும் அவ்வாறு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதாக செயலாளர் தெரிவித்தார். 

அரச உத்தியோகத்தர்கள் வௌிநாடு செல்வது தொடர்பில் தற்போது ஒரு நடைமுறை காணப்படுவதாகவும் குறித்த நடைமுறைக்கு மாற்றமாக வேறு முறைகளில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாயின் அது தொடர்பாக தங்களது அமைச்சுடன் விரிவான கலந்துரையாடல்கள் நடாத்தி அமைச்சரவையின் அனுமதியுடன் முறையான செயன்முறை ஒன்று அமைக்கப்படவேண்டும் என்பதாகவும் அவர் தெரிவித்தார். 

அவ்வாறான செயன்முறைகள் அமைக்கப்படும் வரை தங்களது தகவல்களை வேறு நிறுவனங்களுக்கு வழங்கவேண்டாம் என்பதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் .




ஆசிரியர் வெற்றிடங்களுக்காக 22,000 பேர்களை இணைத்துக் கொள்வதற்காக அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. கல்வி அமைச்சர்- விபரம் https://www.lankajobinfo.com/2022/06/8000.html