நாடு முழுவதிலுமுள்ள மாகாணப் பாடசாலைகளில் 8000 அளவிலான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
ஆசிரியர் செற்றிடங்களை நிரப்புவதற்காக 22,000 பேர்களை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் ரோஹினி கவிரத்ன முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.