ஜூன் மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 1 ஆம் திகதி வரை பாடசாலைகளை நடாத்துவது குறித்து
கீழ்வருகின்ற தீர்மானங்கள் மோற்கொள்ளப்பட்டதாக கல்வி அமச்சு இன்று (26) அறிவித்துள்ளது.01. போக்குவரத்து பிரச்சினைகள் காணப்படாத கிராமிய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் சென்ற வாரம் இயங்கியது போன்றே சாதாரண அடிப்படையில் அடுத்த வாரமும் பாடசாலைகளை நடாத்துதல். இந்த காலப்பகுதியில் போக்குவரத்து பிரச்சனைகள் காணப்படுகின்ற ஆசிரியர்களுக்கு தனது சொந்த லீவிலிருந்து விடுவிப்பதற்கு அதிபர்கள் நடவடிக்கை மேற்கொள்வதுடன் குறித்த காலப்பகுதிக்காக நெகிழ்வு தன்மையுடைய நேரசூசியை அமைத்துக்கொள்வது.
2. கடந்தவாரம் மூடப்பட்ட நகர பிரதேச பாடசாலைகளை அடுத்த வாரத்தில் மூன்று நாட்கள் என்ற அடிப்படையில் செவ்வாய். புதன், வியாழன் தினங்களில் காலை 7.30 முதல் பி.ப 1.30 வரை நடாத்தவேண்டும். இந்தப் பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு வகுப்புகளை நடத்துவது அல்லது நடத்தாமல் இருப்பது குறித்த முடிவு எடுப்பதற்கான அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்படுகின்றது.
மாணவர்கள் சமூகமளிக்காத தினங்களுக்காக அவர்களுக்கான கற்கை நடவடிக்கைகள் ஆன்லைன் மூலமாக அல்லது வேறு மாற்றீடு களின் மூலமாக தொடர்தேச்சையாக நடத்தப்பட வேண்டும்.
03 அடுத்த வாரத்தில் போக்குவரத்து பிரச்சினை காரணமாக பாடசாலைக்கு சமூகம் தர முடியாமல் போகின்றது ஆசிரியர்களுக்கான லீவுகள் சொந்த லீவுகளாக கருதப்படமாட்டாது.
04. சென்ற வாரத்தில் பாடசாலைகளை நடத்துவதற்காக பங்களிப்புச் செய்த அனைத்து அதிபர்கள் ஆசிரியர்களுக்கும் கல்வியமைச்சு தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.