>

ad

ஆசிரியர்கள் குழுவினர் ஆர்ப்பாட்டம்.




க.பொ.த (சா/த) பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் ‍பணிகளுக்காக வருகின்ற ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் இன்று (18) காலிக் கோட்டை சவுன்டர்ஸ் வித்தியாலயத்தின் அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஆரம்பித்திருக்கின்றனர்.

விடைத்தாள்கள் திருத்துகின்ற நிலையத்திற்கு செல்வதற்கு எரிபொருள் இல்லை என்பதாக குறிப்பிட்டே இந்த ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்திருப்பதாக குறிப்பிடுகின்றனர்.

காலியில் மூன்று பாடசாலைகளின் விடைத்தாள்களை திருத்துகின்ற சுமார் 150  ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர்.

தங்களுக்கு விடைத்தாள் திருத்தும் நிலையங்களுக்கு செல்வதற்கு எரிபொருள் கிடைப்பதில்லை எனவும் இந்த நிலை தொடருமானால் சா/ல் பெறுபேறுகள் தாமதம் ஏற்பட்டு சிக்கலான நிலை ஏற்பட காரணமாக அமையும் என்பதாக கூறிபபிட்டனர்.

Post a Comment

0 Comments