ad

ஒரு தேசியப் பாடசாலையில் இருந்து அருகிலுள்ள தேசிய பாடசாலைக்கு மாணவர்களை தற்காலிகமாக இணைத்தல்.

 

ஒரு தேசியப் பாடசாலையில் இருந்து
 அருகிலுள்ள தேசிய பாடசாலைக்கு மாணவர்களை தற்காலிகமாக  சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

அந்த அடிப்படையில் மாணவர்கள் அருகில் உள்ள தேசிய பாடசாலைக்கு
31.12.2022 வரை இணைப்புச் செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு 
இணைப்புச் செய்யும்போது புலமைப் பரிசில் பரீட்சையின் பின்னர் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்ற
வெட்டுப்புள்ளிகளின்படி கூடிய வெட்டுப்புள்ளி கள் கொண்ட பாடசாலையிலிருந்து வெட்டுப்புள்ளி குறைந்த பாடசாலைக்கே இணைப்புச் செய்யமுடியும் என்பதாக கல்வி அமைச்சு இன்று (06) வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கள மொழி சுற்றுநிருபத்தை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்.