ad

ஜூன் 27 பாடசாலை நடாத்துவது குறித்த புதிய அறிவித்தல்.

Breaking news.
நகர்ப்புற பாடசாலைகள் அடுத்த வாரம் மூடப்படும். கிராமிய பாடசாலைகள் 3 நாட்கள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

  ஜூன் மாதம் 25 ஆம் திகதி கல்வி சார்ந்த உத்தியோகத்தர்களுடன் நடாத்திய கலந்துரையாடலின் பின்னர் 2022 ஜுன் 27 முதல் ஜூலை 01 பாடசாலை நடாத்தும் விதம் குறித்து ஊடக அறிக்கை ஒன்றினை கல்வி அமைச்சு வெளியிட்டிருந்தது. அதன் பின்னர் அடுத்த வாரம் எரிபொருள் வினியோகம் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக வலுசக்தி அமைச்சு அறிவித்ததை அடுத்து அடுத்த வாரம் பாடசாலைகளை நடாத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்ளது.

அதன் காரணமாக மேல் மாகாணத்தில் கொழும்பு வலயம் உட்பட நகர்புறங்களை அண்மித்து அமைந்துள்ள பாடசாலைகள் மற்றும் ஏனைய மாகாணங்களில் பிரதான நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகள் என்பன 2022.06.27 ஆம் திகதி முதல் 2022.07.01 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
  
அத்துடன் சென்ற வாரம் இயங்கிய கிராமப்புற பாடசாலைகள் பின்பற்றிய ஒழுங்கு முறைப்படி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து பிரச்சினைகள் இல்லாமலிருக்குமாயின் செவ்வாய் புதன் வியாழன்  ஆகிய 3 தினங்களில் 2022.06.27 ஆம் திகதி முதல் 2022.07.01 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலைகளை நடாத்துமாறு அறிவித்துள்ளது. அத்துடன் இந்தக் காலப்பகுதியில் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிர்களின் லீவுகளை அவர்களது சொந்த லீவாக பதிவுசெய்ய வேண்டாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


 எனினும் குறித்த வாரத்தில் பாடசாலையை நடாத்துவதில் சிக்கல்கள் ஏற்படுமாயின் அது குறித்து மாகாண பணிப்பாளர்கள்,மாகாண செயலாளர்கள் ஊடாக ஆளுநர்களுக்கு அறியப்படுத்தி அதன்படி மேற்கொள்ளப்படும் தீர்மானத்தின் அடிப்படையில் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

2022.ஜூன் 27 ஆம் நிகதி ஆரம்பமாகின்ற வாரத்தில் க.பொ.த. (உ/த) மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்படாடிருக்குமானால் அந்தப் பரீட்சையை இரண்டு வாரங்கள் பிற்போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு.

எமது வட்சப் குழுமம்