2022.05.19
2022 ஆண்டின் முதலாவது தவணையில் முதலாவது கட்டம் நிறைவடைகின்ற தினமான 2022.05.20 ஆம் திகதி விடுமுறை தினமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவுகின்ற நெருக்கடி நிலைமை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றை கருத்தில் கொண்டு மே மாதம் 20 ஆம் திகதி நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஜூன் மாதம் 6ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம் ஆகின்றது.
சிங்கள மொழியிலான ஊடக அறிவித்தல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.