2020 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சையிக்குத் தோற்றிய மாணவர்களில் 98000 மாணவர்கள் உயர் தரம் பயில்வதற்காக தகைமைகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதாகவும் அவர்களில் கணிதப் பாடம் சித்தியடையாமல் பின்னர் சித்திடையவது என்ற அடிப்படையில் உயர் தரம் பயில்கின்றவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்கள் இந்தத் திட்டத்தில் உட்படுத்தப்படவிருக்கின்றனர்.
இந்த செயல்திட்டம் இரண்டு கட்டங்களாக இடம்பெறுவதுடன் எதிர்கால இலக்குகள் குறித்த தௌிவு இல்லாத மாணவர்களை இலக்காகக் கொண்டு நடைபெறவிருப்பதாக அனுஷா கோகுல தெரிவித்தார்.
இரண்டாவது கட்டமாக தற்போது தொழில் பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மாணவர்கள், இளைஞர்கள் சேவை மன்றம் மற்றும் தெசிய இளைஞர்கள் படையணி என்பவற்றில் பயில்கின்ற மாணவர்கள் என்பவர்களுடன் வியாபரங்கள், தொழில்கள் என்பவற்றில் ஈடுபட்டிருப்பவர்களையும் இலக்காகக் கொண்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த மாணவர்கள் பிரதேச செயலகப் பிரிவுகளின் அடிப்படையில் அடையாலம் காணப்பட்டு அவர்களிடம் காணப்படுகின்ற திறன்கள் மற்றும் அவர்கள் ஆர்வம் காட்டுகின்ற துறைகள் என்பவற்றுக்கு அமைய உரிய தொழில் பயிற்சிகளில் அவர்களை உட்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்களை பிரதேச செயலகங்களில் உள்ள தொழில் வழிகாட்டல் அதிகாரி மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம், செயற்திட்டம் தொடர்பான விபரங்களை www.dome.gov.lk எனும் இணையத்தளம் ஊடாகப் பெற்றுகொள்ளலாம்,.
இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து சேவைகளும் மாணவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படவுள்ளது. மாணவர்கள் இந்தத் திட்டத்தின் ஊடாக ஒரு வருட காலத்தினும் NVQ மட்டத்தினை அடைந்துகொள்ளலாம் என்பதாக பணிப்பாளர் நாயகம் அனூஷா கோகுல தெரிவித்தார்.