தபால், புகையிரதம், மோட்டார் போக்குவரத்து, சுங்கம் போன்ற பல நிறுவனங்கள் வரைவிடப்பட்ட சேவையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
அந்த சேவைகளின் உத்தியோகத்தர்கள் வேறு நிறுவனங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்ல முடியாது என்பதாக சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பான பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து பதவி உயர்வுகளும் சம்பள ஏற்றங்களும் குறித் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு அமைவாகவும் அரச கொள்கைக்கு உட்பட்ட அடிப்படையிலும் நடைபெறும் என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இணைந்த சேவை உத்தியோகத்தர்களுக்கு எந்த ஒரு அரச திணைக்களுத்துக்கும் இடமாற்றம் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் மாகாண சேவையில் இருக்கின்றவர்களுக்கு குறித்த மாகாணத்தின் உள்ளே எந்த ஒரு நிறுவனத்துக்கும் இடமாற்றம் பெறுவதற்கும் தங்களுக்கு ஏற்ற விதத்தில் இடமாற்றங்களை அமைத்துக்கொள்வதற்கும் முடியுமாக உள்ளது. எனினும் வரைவிடப்பட்ட சேவையில் அவ்வாறு செய்ய முடியாது. அவர்கள் ஓய்வு பெறும் வரையில் அந்த திணைக்களத்திலேயே சேவையாற்ற வேண்டும். அத்துடன் அவர்கள் பதவி உயர்வு பெறும் போது அடுத்த சேவைகள் போன்றே உரிய வினைத்திறன் தடைதாணடல்கள் பூர்த்திசெய்யவேண்டும் என்பதுடன் உரிய தகைமைகளையும் பெற வேண்டும்.
அத்துடன் சில வரைவிடப்பட்ட சேவைகளின் கடமைகள் வேறு நிறுவனங்களில் இல்லாமையின் காரணமாக அவர்களுக்கு அந்த நிறுவனங்களுக்கு இடமாற்றம் பெற முடியாத நிலை காணப்படுகின்றது. உதாரணமாக புகையிரத ஓட்டுணர்களுக்கு வேறு ஒரு நிறுவனத்திற்கு சேவைக்குச் செல்ல முடியாது. அந்த அடிப்படையில் வரைவிடப்பட்ட சேவையில் இணைகின்றவர்கள் அவர்கள் சேவையினைப் பொறுப்பேற்றது முதல் அந்த சேவைக்குரிய ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு நிறுவனத்தினால் விதிக்கப்படுகின்ற திணைக்களத்துக்கு உட்பட்ட எந்த ஒரு சேவை நிலையத்திலும் அது இலற்கையில் எங்கு அமைந்திருந்தாலும் பணியாற்றவேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில் வரைவிடப்பட்ட அரச சேவையானது சிக்கலான ஒரு விடயமாகக் கருதப்படுகின்றது என்பதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா? என்பதாக புகையிரத மற்றும் தபால் தொழில் சங்க உறுப்பினர்கள் சிலரிடம் வினவினோம்.
அரச சேவை ஊழியர்களின் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள ஏற்றங்கள் என்பன தொடர்பில் 2006 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களே இந்த நிலை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது என்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். யாரேனும் ஒருவர் ஒரு தொழில் இலக்கை முதன்மைப் படுத்தியே தொழில் ஒன்றில் நுழைகின்றனர் இது அனைத்து துறைகளிலும் இணைகின்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் பொதுவான விடயமாகும் என்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
அவ்வாறு இலக்குகளை கொண்டவர்களாகக் கொண்டு வந்தவர்களின் சேவையின் கீர்த்தி சிதைவடைகின்ற நிலையிலான மேற்படி திருத்தங்கள் காரணமாக பிரச்சினைகள் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டனர். இதன் விளைவாக 2006 ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் தபால் மற்றும் புகையிர சேவைகள் உட்பட பல சேவைகளிலும் இருப்பவர்களின் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்பன நடைபெறுவதாகவும் குறிப்பிட்டனர். இவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது வரைவிட்டப்பட்ட சேவை என்பதாக பிரித்து வைப்பதன் ஊடாக ஊழியர்களை அந்த நிறுவனத்திலேயே அடைக்கப்பட்ட நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பதாக புரிந்துகொள்ளலாம். எனினும் இணைந்த சேவையில் இருப்பவர்களுக்கு தாங்கள் நினைத்த சேவைத்தளங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லாம்.
வரைவிடப்பட்ட சேவைகளில் இருப்பவரகள் அவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற சேவை வேறு நிறுவனங்களில் இல்லை என்ற ஓரே காரணத்தினாலேயே அவர்களால் வேறு நிறுவனங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல முடியாதுள்ளது என்பதாகவும் குறிப்பிடமுடியாது. உதாரணமாக புகையிரத சேவையில் லிகிதர் பதவி ஏனைய பதவிகளுக்கு சமாந்தரமான சம்பள அளவினைக் கொண்டிருக்கின்றது. எனினும் அவர்களால் வேறு ஒரு நிறுவனத்தின் லிகிதர் பதவிக்கு செல்ல முடியாது என்பதுடன் இணைந்த சேவையில் உள்ள முகாமை உதவியாளர்கள் அளவிற்கு பதவி உயர்வு வாய்ப்புக்களும் அவர்களுக்குக் காணப்படுவதில்லை. அத்துடன் 2006 ஆம் ஆண்டு அனைத்து அரச சேவைகளையம் இணைத்து மேற்கொள்ளப்பட்ட சம்பளத்திருத்தமானாது வரைவிடப்பட்ட சேவையினைப் பெரிதும் பாதித்திருப்பது புரிந்துகொள்ள முடிகின்றது. அத்துடன் பதவி உயர்வுக்கான வாய்ப்புக்கள் பல இல்லாமலாக்கப்பட்டுள்ளது. கடந்த 100 வருடங்களாக காணப்பட்ட கடதங்கள் வழங்கும் தபால்காரர் என்ற பதவி உட்பட 18 பதவிகள் நீக்கப்பட்டுள்ளதாக தபால் தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
கடிதங்களைத் தரம் பிரிப்பவர் என்ற பதவிக்கு உரியவர் நாட்டில் உள்ள கிராமங்கள் வௌிநாடுகள். விமான சேவைகள் என்பன தொடர்பான அறிவினைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலை காணப்பட்டது. தற்போதைய நிலையில் கடிதங்களை தரம் பிரிப்பவர் என்ற பதவி இல்லாமலாக்கப்பட்டுள்ளதால் ஆரம்ப நிலை (சிற்றூழியர்) பதவியாக தபால் உதவியாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளதுடன் கடிதம் வினியோகித்தல், கடிதம் தரம் பிரித்தல் போன்ற பணிகளுடன் கூட்டித் துப்புறவு செய்தல் போன்ற பணிகளும் தபால் உதவியாளரினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இந்த அடிப்படையில் குறித்த தொழிலுக்கான கீர்த்தி இல்லாமலாகியுள்ளது.
அத்துடன் முகாமையாளர் பதவிக்கு தரம் உயர்வு பெறுவதற்கான உத்தியோகத்தர் ஒருவர் 42 வருட சேவைக் காலத்தினைப் பூர்த்தி செய்திருக்க வேண்டியுள்ளது என்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். ஒரு உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றி 20 வயதில் சேவைக்கு வருவாரானல் அவரது 42 வருட சேவைக்காலத்தை பூர்தி செய்யும் போது அவருக்கு 62 வயதாகிவிடும். மேற்படி திருத்தங்களை மேற்கொண்டவர்கள் இது குறித்து கருத்தில் கொள்சளமையினால் வரைவிட்ட சேவையில் பாரிய பிரச்சிகைனள் உருவாகியுள்ளது என்பதாகக் குறிப்பிட்டனர்.
அத்துடன் இதற்கு முன்னர் காணப்பட்ட தபால் நிலையப் பொறுப்பாளர் தரம் III என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்ட போதிலும் அவர்களுக்கான கடமைகள் என்ன என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. அதன் காரணமாக 10 வருட காலங்கள் அதே சேவையில் இருந்து அதன் பின்னர் அவர்கள் தரம் 2 இற்கு பதவி உயர்வு பெறவேண்டும்.
இவ்வாறான பல பிரச்சினைகள் குறித்து குறித்த கட்டுரையில் குறிப்பிடப்படுள்ளது. எவ்வாறாயினும் 2006 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் வரைவிட்ட சேவையில் பல பிரச்சினைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.