சுகாதார பணியாளர்களின் ஒன்றியத்தின் தீரிமானம்.
சுகாதாரப் பணியாளர்களிள் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்ற சுகாதார அலுவலர்கள் எதிர்வதும் 26 ஆம் திகதி மேல் மாகாண வைத்தியசாலைகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுகின்றது.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளைப் போன்று சுகாதார சேவையிலும் காணப்படுகின்ற சம்பள முரண்பாடுகளை தீர்க்குமாறு அரசாங்கத்துக்கு வழியுறுத்தும் அடிப்படையில் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன் அடிப்படையில் தாதிகள் மற்றும் துணை மருத்துவ சேவைகளின் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வேலை நிறுத்தத்தில் பங்குகொள்ள இருக்கின்றனர்.
குறித்த வேலை நிறுத்தத்தின் பின்னர் தீர்வு ஒன்று கிடைக்காவிடின் எதிர்வரும் 30 ஆம் திகதி நாடளாவிய ரீதியிலான தொடரான வேலை நிறுத்தம் மேற்கொள்ளவிருப்பதாக நேற்று கொழும்பில் இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரச தாதி உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தலைவர் ரத்னபிரிய தெரிவித்தார்.