ad

அதிபர் சேவை அசிரிய ஆலோசகர் சேவை ஆசிரியர் சேவை என்பன வரைவிடப்பட்ட சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தல் வௌியானது

 இலங்கை அதிபர் சேவை இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை இலங்கை ஆசிரியர் சேவை என்பவற்றை வரைவிடப்பட்ட சேவையாக்குகின்ற அதி விசேட  வர்த்தமானி அறிவித்தல் 2021 வருடம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முதல் செல்லுபியாகும் அடிப்படையில் கல்வி அமைச்சின் செயலாளரின் கையொப்பமிடப்பட்டிருக்கின்றது. 

அதன் அடிப்படையில் மேற்படி 3 சேவைகளும் வரவிடப்பட்ட சேவைகளாக்கப்பட்டுள்ளன. 

நியமனம் வழங்குதல், பதவி உயர்வு வழங்குதல், ஒழுக்காற்று, இடமாற்றம் மற்றும் ஏனைய வியங்கள் சம்பந்தமான அதிகாரங்கள் அவ்வாறே இப்போது நடைமுறையில் இருக்கின்ற அடிப்படையிலேயே காணப்படும் என்பதாக குறிப்பிடப்படுள்ளது. 

சம்பளம் தொடர்பாக உரிய தரப்பினர்களிடம் வினவப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதாகவும் சேவைப் பிரமானக் குறிப்பு திருத்தி அமைக்கப்படும் என்பதாகவும் குறிப்பிடப்படுள்ளது. 

கடந்த காலங்களில் சம்பளப்பரச்சினை மற்றும் ஆசிரியர் ஆதிபர் சேவைகளை வரைவிடப்பட்ட சேவையாக மற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன் அடிப்படையில் மேற்படி இரண்டு கோரிக்ைககளும் நிரைவேற்றப்பட்டுவிட்டன.  

சேவைப் பிரமாணக் குறிப்பினைப் பார்வையிட 

இங்கு கிளிக் செய்யவும்.