இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் அசோக சன்ஜீவ வரைவிட்ட சேவைகள் தொடர்பாக வௌியிட்டுள்ள அறிவித்தலின் தழிழாக்கம் இங்கு தரப்படுகின்றது,. (இது அவரது சொந்தக் கருத்தாக இடப்பட்டிருந்தது)
இன்று காலை நேரத்தில் அதிபர் சேவையானது வரைவிடப்பட்ட சேவையாக மாற்றப்பட்டுவிட்டது. நான் அறிந்த அளவில் வரைவிட்ட சேவைக்காக எமது இணக்த்தினைத் தெரிவித்திருக்கவில்லை. அமைச்சரவை உப குழுக் கூட்டத்திற்கு ஆசிரியர் சேவை சங்கத்தினரும் அதிபர் சேவை சங்கத்தினரும் வேறு வேறாகவே அழைக்கப்பட்டனர். அவற்றில் ஒரே ஒரு அதிபர் சங்கத்தைத் தவிர வேறு எந்த சங்கமும் வரைவிட்ட சேவையினைக் கோரவில்லை. எனினும் பலவந்தமாக வரைவிட்ட சேவையினை எமது தலைகளில் சுமத்தியிருக்கின்றார்கள்.
குறித்த வர்தமானி அறிவித்தலை வாசிக்கும் வரையில் வரைவிட்ட சேவையின் வரையறைகள் நியதிகள் என்பன குறித்து நாம் அறிநிதிருக்கவில்லை. எனினும் இனிமேல் கல்வி நிர்வாக சேவைக்கு திறந்த போட்டிப் பரீட்சை ஊடாக மாத்திரமே இணைய முடியும் என்பதாக வர்த்தமானி ஊடாக அணுமானிக்க முடிகின்றது. எனவே ஆசிரியர்கள் அதிபர்கள் ஆகியோருக்கு கல்வி நிர்வாக சேவையில் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் இணைகின்ற அடிப்படையிலான (குறைபாடுள்ளள வரைவிட்ட சேவையாக) மாற்ற முடியுமானால் அது சிறந்ததாக அமையும்.
அவ்வாறில்லை எனில் கல்வி நிர்வாக சேவையின் சமநிலை இல்லாமலாகிவிடும். அனுபவம் உள்ளவர்கள் இல்லாமலாகி அனுபவமற்றவர்கள் திறந்த போட்டிப் பரீட்சையின் ஊடாக இணைவர்களானல் அது கல்வித் துறையில் பலவிதமான பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக அமையும்.
அதிபர் சங்கங்களில் தலைவர்களாக இருக்கின்ற எமக்கு இதில் எந்தப் பாதிப்பும் இல்லை. எங்களில் பெரும்பாலானவர்கள் அதிபர் சேவை 1 இல் இருக்கின்றனர் என்பாதுடன் வயதில் 50 ஐத் தாண்டிவிட்டார்கள் என்பதால் சேவை மூப்பின் அடிப்படையில் இலங்கை கல்வி நிர்வாக சேவை 111 இல் இணைந்து சம்பளப் படியேற்றத்தைக் குறைத்துக்கொண்டும் ஆரம்ப மட்ட சேவையில் இணைந்துகொண்டும் மன வேதனையுடன் ஓய்வு பெறுவதற்குள்ள விருப்பமுன்யை இதற்கான காரணமாகும்.
இந்த நிலையிலும் 2016 மற்றும் 2019 ஆண்டுகளில் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சைகளில் புதிதாக அதிபர் சேவை 111 இல் இணைந்துகொண்ட அதிபர்களின் நலன் கருதி பாடுபட்டோம். எனினும் வரைவிட்ட சேவை குறித்து எங்களைப் போன்ற வயோதிப அதிபர்கள் வரைவிடப்பட்ட சேவை குறித்து கவலைப்பட்டுக்கொண்டிக்கும் நிலையில் இது குறித்து உண்மையில் கவலைப்பட வேண்டி இள வயது அதிபர்கள் பலர் பாராமுகமாக இருக்கின்றனர். எனவே நாங்கள் அது குறித்து கவலைப்படாமல் அதிகளவான ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்கின்ற வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதாக எண்ணத் தோன்றுகின்றது.