ad

அரச ஊழியர்கள் அனைவருக்கும் இந்த மாதம் முதல் 5000/- பொடுப்பனவு வழங்கப்படுகின்றது.



நாட்டின் அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கு ரூபா 5000 இம்மாதம் சம்பளத்துடன் இணைந்த  கொடுப்பனவாக வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்.

இந்தக் கொடுப்பனவானது ஓய்வு பெற்ற அனைவருக்கும் கிடைக்கப்பெறும் என்பதாகவும் இந்த வருடம் சம்பளம் அதிகரிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

நாட்டில் நெருக்கடியான நிலையில் மக்களுக்கு நலன்களை வழங்குவதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கும் கொடுப்பனவு ஒன்றினை வழங்குவதற்காக குறித்த நிறுவனங்களுடம் பேச்சுவார்த்தை நடாத்த இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

மேற்படி செலவினங்களுக்காக போதுமான நிதி வரவு செலவுத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் இந்த செலுவகளுக்காக எந்த வரிகளும் விதிக்கப்படமாட்டாது என்பதாகவும் குறிப்பிட்ட நிதி அமைச்சர் இது தொடர்பான சுற்றுநிருபம் நிதி அமைச்சினால் விரைவில் வௌியிடப்படும் என்பதாகவும் குறிப்பிட்டார்.

எமது வட்சப் குழுமங்களில் கீழ் குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்து இணையலாம்.