தேசிய சமாதானப் பேரவையும் பிரித்தானிய DTE நிறுவனமும் இணைந்து வழங்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளின்பல்கலைக்கழக கல்விக்கான நிதி உதவி 2022
இலங்கை தேசிய சமாதானப் பேரவை
National Peace Council of Sri Lanka
2019ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்து, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், தம்மை குறித்த பல்கலைக்கழகங்களில் பதிவு செய்து கொண்ட நுவரெலியா, பதுளை மாவட்ட தோட்டத் தொழிலாளர்களுடைய பிள்ளைகள் மட்டுமே இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் தமது பெற்றோரின்
தொழில்,
நிரந்தர வதிவிட விலாசம்,
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்
உட்பட சுய விபரங்களை எழுதி அனுப்புவதோடு, விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக்கொள்வதற்கு தமது வதிவிட விலாசம் எழுதிய நீண்ட தபால் உறை ஒன்றையும் இணைத்து பின்வரும் விலாசத்திற்கு இவ்விளம்பரம் வெளியாகிய நாளிலிருந்து பதினான்கு (14) நாட்களுக்குள் எமக்கு கிடைக்கக்கூடியதாக பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விளம்பரம் (வௌியாகிய திகதி 09/01/2022)
இங்ஙனம்,
Ms. Chithrupa Vidhanapathirana,
Manager Administration, (DTE Unit)
Virakesari
National Peace Council of Sri Lanka,
12/14, Purana Vihara Road,
Colombo - 06.
Tel : 011 2818344, 2854127, 2809348
பிற்குறிப்பு: ஆங்கில மொழியில் எழுத, வாசிக்கத் தெரிந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
(க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிய திகதி, சித்தியடைந்த திகதி, மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற திகதி ஆகியவற்றை சரியாக விண்ணப்பத்திற்கான கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டிருத்தல் வேண்டும்.
இந்த விளம்பரம் வீரகேசரி பத்திரிகையில் 09/01/2022 ஆம் திகதி பிரசுரமானது.
குறித்த விளம்பரத்தைப் பர்வையளிட Click here