ad

க.பொ.த (உ/த) பரீட்சை 2021 நடைபெறும் காலத்தில் ஆரம்பப் பிரிவுக்கு விடுமுறை வழங்குவது குறித்த கல்வி அமைச்சின் அறிவித்தல்.



பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக ஏற்கனவே வௌியிட்டுருந்த சுற்றுநிருபங்களுக்கு மேலதிகமாக 2021.01.20 ஆம் திகதி மற்றுமொரு சுற்றுநிருப்பத்தினை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது. சிங்கள மொழியிலான சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு.

க.பொ.த (உ/த) பரீட்சை நடைபெறுகின்ற 2022.02.07 முதல் 2022.03.05 வரையான காலப்பகுதி உள்ளடங்கும் அடிப்படையில் 2022.02.04 முதல் 2022.03.06 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்டுவதாகவும், ஆரம்பப் பிரிவுக்கு விடுமுறை வழங்குவதில்லை எனவும் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. 

அந்த அடிப்படையில் குறித்த காலப்பகுதிக்கு ஆரம்பப் பிரிவுக்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை என்ற போதிலும், பரீட்சை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடையான நிலை ஏற்படுகின்ற பாடசாலையாயின் இது தொடர்பில் குறித்த அதிபர்கள் வலயகப் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறியப்படுத்தவேண்டும். அவ்வாறான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் மாகாணப் பணிப்பாதளருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு விடுமுறைகள் வழங்கப்படும் காலப் பகுதிகளுக்காக ஒப்படைகள் வழங்க முடியும் என்பதாக குறித்த சுற்றுநிருபத்தில்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பரீட்சை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி பரீட்சை நடவடிக்கைகளுக்கான ஆசிரியர்கள் குறித்த கடமைகளுக்காக விடுவிக்கப்படவேண்டும் என்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிங்கள மொழியிலான சுற்றுநிருபத்தினை பர்வையிட Click /here