10 ஆம் திகதி முதல் பாடசாலைகள் வழமைபோல் நடைபெறும் என்பதாகவும் அனைத்து பாடசாலைகளின் மாணவர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கவேண்டும் என்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து மாணவர்களும் பாடசாலைக்கு வருவது தொடர்பிலான சுதாதார விதிமுறைகளை சுகாதாரத அமைச்சு விரைவில் வௌியிடும் என்பதாக குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 12 வயத்துக்கு கூடிய மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசி மாத்திரம் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியிருக்கின்றது.