கொடபொல தேசிய பாடசாலைக்கு முன்னால் இடம்பெற்ற ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியை ஒருவர் நேற்று (09 ஆம் திகதி) மாலை திடீரென நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
.தெனியாய மத்திய வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவில் சேவையாற்றிய மிரிஸ்வத்தை தெனியாய பகுதியைச் நேர்ந்த 27 வயது நிரம்பிய வருனி மதுபாஷனி என்பவரே இவ்வாறு உயிரழந்துள்ளார்.
அவர் சில காலங்களுக்கு முன்னர் Bபைபாஸ் சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொண்டிருந்தார். குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியை கீழே விழுந்ததும் தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதுடன். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்தாதாக வைத்தியசாலை வட்டாரத்திலிருந்து அறியக்கிடைத்தது.
மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரப் பிரிவினர் சந்தேகப்படுவதாகக் தெரிவிக்கின்றனர். அத்துடன் குறித்த ஆசிரியையின் மரணப் பரிசோதனை இன்று (10 ) தெனியாய ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன் கொஸ்மோதரை பொலிஸ் பிரிவினால் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.