ad

ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கபடுமானால் கல்வி நிர்வாக சேவை வழக்குத் தொடரும்.



ஆசிரியர் அதிபர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக  அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தின் காரணமாக தேசிய சம்பளக் கொள்கையின் விதிமுறைகள் மீறப்படுவதாக கல்வி றிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன் இதற்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் தீர்மானித்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

மேற்படி அமைச்சரவைத் தீர்மானத்தின் ஊடாக அரச சேவையில்  சேவை மூப்பு கல்வித் தரம் என்பன அதிகமாக இருப்பவர்களின் சம்பளத்திலும் பார்க்க சேவை மூப்பு மற்றும் கல்வித் தகைமை குறைந்தவர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்படுவதாக கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் குறிப்பிடுகின்றனர். 

2009 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்துகொள்கின்ற ஒருவர் 2017 ஆம் ஆண்டில் கல்வி நிர்வாக சேவையில் இணைகின்ற ஒருவர் 54290 சம்பளத்தைப் பெறுகின்றார்  என்பதுடன் 2009 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவையின் 1 ஆம் தரத்திற்கு நியமனம் பெற்ற ஒருவர் 2022 ஆம் ஆண்டு கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவாவாரானால் அவர் பெறுகின்ற ஆரம்பச் சம்பளம் 77960 என்பதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர். 

செய்தி மூலம் - அருண.