ad

பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களையும் ஆரம்பிப்பது குறித்து கொவிட் செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.





பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களையும் ஆரம்பிப்பது குறித்து ஜனாதிபதியின் வௌிநாட்டுப் பயனத்தினை நிரைவு செய்து நாடு திரும்பியதன் பின்னர் கொவிட் செயலணிக் குழுக் கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருக்கின்றது.

இலங்கையின் அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகள் (தரம் 1 முதல் 5 வரை) தற்போது ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன் அனைத்து பாடசாலைகளினதும் 10,11,12,13 தரங்கள் கொவிட் செயலணியின் பரிந்துரைகளுக்கு அமைய நவம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. 

அத்துடன் அனைத்து பாடசாலைகளினதும் தரம் 6 முதல் 9 வரையான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள கொவிட் செயலணிக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்டவுள்ளதாக கல்வி அமைச்சின அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக "அத" செய்திச் சேவை செய்தி வௌியிட்டுள்ளது. 

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நவம்பர் 14 ஆம் திகதி நடாத்தவும் க.பொ.த (சா/த) பரீட்சையை நவம்பர் மாதம் 15 ஆம் திகதி நடாத்தவும் திட்டமிடப்பட்டு பின்னர் 2022 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் நடாத்துவதற்கு கல்வி அமைச்சு எதிர்பாக்கப்படுகின்றது. குறித்த பரீட்சை இபரும்பாலும்பெப்ரவரி மாதமளவில் நடாத்தப்படலாம் என்பதாக கல்வி அமைச்சு வட்டாரத்திலிருந்து வருகின்ற வெய்திகள் ஊடாக அனுமானிக்க முடிகின்றது.