ad

53000 பயிலுனர் பட்டதாரிகளுக்கு ஜனவரி 1 முதல் நிரந்தர நியமனம்





அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் 53 ஆயிரம் பேருக்கு 2022 ஜனவரி 01 ஆம் திகதி முதல் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த பயிலுனர் பட்டதாரிகளின் சம்பளமும் அதிகரிக்கப்படவிருப்பதாக மாகாண , உள்ளூராட்சி  தொடர்பான இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

அந்த அடிப்படையில் பயிலுனர் பட்டதாரிகளின் மாதாந்த ஊதியம் 41, 000 ரூபா ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

பயிலுனர் பட்டதாரிகளுக்கு தற்போது 20,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.