ad

அரச சேவைக்காக உத்தியோகத்தர்களை அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம்



அரச சேவைக்காக உத்தியோகத்தர்களை அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் சிங்கள மொழியல்  வெளியாகியுள்ளது அதனது விபரங்கள் சுருக்கமாக தமிழில் தரப்படுகின்றது.

01. அரச சேவையில் இருப்பவர்களை தேவைக்கு ஏற்ப ஈடுபடுத்துவதற்கான அதிகாரம் அமைச்சரவைச் செயலாளர்/ திணைக்களத்தளத் தலைவர்/  நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
02 உத்தியோகபூர்வ வாகனங்கள் வைத்திருக்கின்ற மற்றும் வகனங்களுக்காக போக்குவரத்துக் கொடுப்பனவு பெறுகின்ற பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு இது ஏற்புடையதன்று
03. சேவைக்கு அழைக்கப்படாதவர்கள் ஒன்லைன ஊடாக கடமைகளை மேற்கொள்ள வேண்டும். 
04. அத்தியாவசிய சேவைக்காக அழைக்கப்பட்டவர்கள் தவிர்ந்த ஏனையவர்களுக்கு ஒன்லைன் மூலம் பணியாற்றுவதற்கான தற்காலிகமாக ஏதாவது ஒரு காரியாலயத்திற்கு இணைப்புச் செய்வதற்கான அதிகாரம் அமைச்சரவைச செயலாளர்/ திணைக்களத்தளத் தலைவர்/ நிறுவனத் தலைவர்களுக்கு உண்டு
05. கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், விசேட நோயுடையவர்கள் ஆகியோர் அழைக்கப்படலாகாது என்பதுடன் அத்தியாவசியப்படுமிடத்து மாத்திரம் அழைக்கலாம். இவ்வாறாக சந்தர்ப்பங்களில் விசேட கால அவகாரமும் விசேட வசதிகளும் வழங்கப்படவேண்டும்.
06. உத்தியோகத்தர்களின் வரவினைப் பதிவுசெய்யவதற்கு வரவுப் புத்தகம் மாத்திரம் பயன்படுத்துவ போதுமானதாகும்
07 . காரியாலயத்தில் கொவிட் 19 இலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக பின்பற்ற வேண்டிய 16 நடைமுறைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. 
08. கூட்டங்களை ஒன்லைன் ஊடாக நடாத்துதலாம்.
09.யாரேனும் ஒருவர் தனிமைப்படுத்தப்படுமிடத்து அவருக்கு தாபன விதிக் கோவையின் பிரகாரம் அவரது லீவு சம்பளத்துனானா லீவாகக் கணிப்பிடப்படும்.
10 இதற்கு முன்னைய சுற்றுநிருபங்களின் அடிப்படையில் அரச ஊழியர்கள் சேவைக்கு அழைகப்பட்டபோது அவர்கள் பெற்றுக்கொண்ட லீவுகள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

இவை தவிர மேலதிக விபரங்கைள சிங்கள மொழி சுற்றுநிருபத்தில் பார்வையிடலாம்,.

சிங்கள மொழி சுற்றுநிருபம்.



சிங்கள மொழி சுற்றுநிருபம் பதிவிறம் செய்ய Click here