ad

தனியார் வகுப்புக்கள் ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்.



எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி முதல் மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களை நடாத்துவதற்கு நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளதாக அகில இலங்கை தொழில்முறை விரிவுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் 100 மாணவர்களுக்குக் குறைந்த தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் கமல் பிரயங்க தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு விடுபட்ட பாடவிதானங்களை மேலதிக நேரங்களில் கற்பிப்பதற்கு தனியார் வகுப்பு ஆசிரியர்கள் ஆயத்தமாகின்றனர். 

இதற்கு மேலதிகமாக சாதாரண தரம், உயர் தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மேலதிக மணித்தியாலயங்கள் ஊடாக கற்பிப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.  

தனியார் வகுப்பு நடாத்தும் ஆசியர்கள் மூலமாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்லைன் வகுப்புக்களை தொடர்ந்தும் நடாத்துமாறு மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுப்பதனால் அதனை தொடர்ந்தும் நடாத்துவதாக அகில இலங்கை தொழில்முறை விரிவுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதளவில் நாடுமுழுவதும் ஒரு இலட்சம் அளவிலான தனியார் வகுப்பு நடாத்தும் ஆசிரியர் இருப்பதாக குறித்த சங்கம் தெரிவிக்கின்றது. 

மூலம் - அருண