ad

கிராம சேவை உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பு தயாரிக்கப்பட்டது.



கிராம சேவை உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பு தயாரிக்கப்பட்டு  தேசிய சம்பள ஆணைக்குழுவின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்தார். 

குறித்த சேவைப் பிரமாணக் குறிப்பானது தேசிய சம்பள ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட்டதன் பின்னர் கிராமை சேவை உத்தியோகத்தர்கள் முகம்கொடுத்துவந்த பல பிரச்சினைகளுக்கான தீர்வு கிட்டும் என்பதாக அமைச்சர் தெரிவித்தார். 

அதன் அடிப்படையில் பல வருடகாலமாக காணப்பட்ட கிராம சேவையாளர்களின் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஏனைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எம்.ஏ.எம். சித்ரானந்த அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.