ad

பாடசாலை ஆரம்பிக்கப்பட முன்னர் விசேட ஒத்திகை மேற்கொள்ள நடவடிக்கை.



பாடசாலை ஆரம்பித்ததன் பின்னர் பாடசாலைச் செயற்பாடுகள் மேற்கொள்கின்ற விதம் குறித்து விசேட ஒத்திகையொன்றினை மேற்கொள்வதற்கு சுகாதாரப் பிரிவு கவனம் செலுத்துகின்றது. இந்த ஒத்திகை செயற்பாடானது பாடசாலைகள் ஆரம்பமாகும் தினத்திற்கு முன்னதாக நடைபெறவுள்ளது. 

இந்த நடவடிக்கைகளுக்காக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை ஒனறிணைத்து நடாத்துவது அவசியமானதாகும் என்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

பாடசாலை ஆரமப்பித்தன் பின்னர் நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்ற எண்ணிக்கையினை குறைக்க வேண்டுமாயின் சுகாதார விதிமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்பட வேண்டும் என்பதாகக் குறிப்பிட்ட விசேட வைத்திய நிபுணர் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வது தொடக்கம் அவர்கள் வீடு திரும்பும் வரையிலான அனைத்து செயற்பாடுகள் குறித்தும் முறையான திட்டம் ஒன்றினை இப்போதே அமைக்க வேண்டும் என்பதாகக் குறிப்பிட்டார். 

மேற்படி திட்டம் அமைத்து அதனைச் சரியாக நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்திகையொன்றினை செயற்படுத்தி அதற்கு அமைய செயலாற்றுமிடத்து மீண்டும் பாடசாலையினை மூடுகின்ற நிலை ஏற்படாமலிருக்கும் என்பதாக குறிப்பிட்டார். 

பாடசாலை ஆரம்பமானாதன் பின்னர் மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியுமான முகக் கவசங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதாகவும்,அதற்கான மூலப்பொருட்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மைதானங்களிலும் சிறுறுண்டிசசாலைகளிலும் மாணவர்கள் சமூ இடைவெளியினைப்  பேணுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.