முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வது தொடர்பான தீர்மானம்.
அடுத்த வருடத்துக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளல் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளின் கால வரையறைகளை கல்வி அமைச்சு திருத்தியமைத்துள்ளது.
அதன் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைகள் நவம்பர் 5 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்தப்படவேண்டும்
அதனை அடுத்து தெரிவு செய்யப்படுகின்ற மாணவர்களின் தற்காலிக பெயர்ப் பட்டியல் நவம்பர் மாதம் 30 ஆம் திகதியாகும்போது அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்ப்படவேண்டும்.
மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் என்பவற்றை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி டிசம்பர் மாதம் 14 ஆகும். அவை தொடர்பான விசாரணைகள். டிசம்பர் 14 முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவேண்டும்.
தெரிவுசெய்யப்படும் மாணவர்களின் இறுதியான பெயர்ப்பட்டியல் ஜனவர் 14 ஆம் திகதி காட்சிப்படுப்படுத்தப்படவேண்டும்.
மேற்படி திருத்தங்கள் மாகாண. வலய, கோட்டக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. என்பதுடன் இதற்கு முன்னர் வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்தில் புதிய மாணவர்களைப் பாடசாலைக்கு இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் இந்த ஆண்டிலேயே நடைபெறவேண்டும் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நாட்டின் கொவிட் நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமையினால் இந்த திகதி மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
தரம் 01 இற்கு புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது கடந்த ஆகஸ்ட் 7 ஆம் திகதியுடன் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- அருண -