ad

அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகள் 25 ஆம் திகதி ஆரம்பம்.



நாட்டின் அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப்பிரிவு இம்மாதம் 25 ஆம் திகதி திங்கள் கிழமை ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவுகளினது கல்வி நடவடிக்கைகள்  ஆரம்பிக்கப்படும் போது  வழங்கப்பட்டிருக்கின்ற சுகாதார வழிமுறைகளை அனைத்து கவ்வி சார் மற்றும் கல்வி சாரா அலுவலர்களும் பின்பற்ற வேண்டும் என்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார். 

கொவிட் நோய் பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் முழுவதும் மூடப்பட்டதுடன் அதன் பின்னர் 200 க்கு குறைந்த பாடசாலைகள் இம்மாதம் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.