கல்வி அமைச்சுக்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள பயிலுனர் பட்டதாரிகள் 21 ஆம் திகதி பாடசாலைக்கு சேவைக்கு சமூகமளிப்பதனைப் பொறுத்தே அவர்களது சேவை நிரந்தரமாக்குதல் அல்லது நிரந்தரமாக்காதிருத்தல் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்பதாக அரச சேவைகள் , மாகாண மற்றும் உள்ளூராட்சி சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார்.
அன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்காதவர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சுக்கு அ,றிவித்திருப்பதாக செயலாளர் குறிப்பிட்டார்.
அரச சேவைக்கு உள்வாங்கப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளில் கல்வி அமைச்சுக்கு இணைப்புச் செய்யப்பட்ட 18,000 பட்டதாரிகள் அனைவரும் 21 ஆம் திகதி கட்டாயமாக சேவைக்கு சமூகமளிக்குமாறு செயலாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படுபவர்கள் தனது சேவையினை நிரந்தமாக்குவதற்கு முன்னர் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்படவில்லையாயின் அவ்வாறானவர்களில் எந்த விதப் பயனும் இருக்கப் போவதில்லை என்பதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
அத்துடன் பாடசாலைகள் ஆரம்பமாகும் ஆரம்ப தினங்களில் அதிபர்கள் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் காணப்பட்டாலும் பாடசாலைக்கு சமூகம் தருகின்ற பிள்ளைகளின் செயற்பாடுகளை முகாமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா நேற்று (18 ஆம் திகதி) தொரிவித்தார்.