ad

21 திகதி ஆசிரியர்கள் பாடசாலை வராவிட்டாலும் பாடசாலைகள் ஆரம்பிக்க கல்வி அமைச்சு திட்டம்.



பயிலுனர் பட்டதாரிகள் 18,000 பேர் பாடசாலைகளுக்கு 

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இம்மாதம் 21 ஆம் திகதி பாடசாலைகளுக்கு சமூகமளிக்காவிட்டாலும் பயிலுனர் பட்டதாரிகள் 18,000 பேர்களையும் பாடசாலைக் கடமைகளில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டிருக்கின்றது. 

அத்துடன் திறக்கப்படுகின்ற பாடசாலைகளுக்காக தொண்டர் ஆசிரியர்களையும் ஆசிரியர் உதவியாளர்களையும் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இவற்றுக்கு மேலதிகமாக வலயக் கல்விக் காரியாலங்களின் உத்தியோகத்தர்களையும் பாடசாலைக் கடமைகளில் ஈடுபடுத்துவதற்காக கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 


மாணவர் தொகை 200 இலும் குறைந்த சுமார் 5000 பாடசாலைகள் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. பாடசாலைகள் ஆரம்பித்து முதல் இரண்டு நாட்களும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுவதில்லை என்பதுடன் முறையாக கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரமே ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதாக கல்வி அமைச்சின் செய\லாளர் பேராசிரியர் கபில பெரேரா  17 ஆம் திகதி தெரிவித்துள்ளார்.  

பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும் மாணவர்களுக்கு எந்த விதமான பிரச்சினைகளும் ஏட்படாது என்பதுடன் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்புவது தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை என்பதாகவும் பாடசாலைகளின் கல்வி சாரா ஊழியர்கள் குறித்த தினங்களில் கட்டாயமாக சமூகமளிக்க வேண்டும் என்பதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.  

பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார். 

தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு இன்னும் கிட்டாமையினால் தங்களது தொழிற்சங்க போரட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும்  அதிபர்கள் ஆசிரியர்கள் 21 ஆம் திகதி கடமைக்குச் செல்வதில்லை என்பதாகவும் அதிபர்கள் மற்றும் ஆசியர் தொழிற்சங்கள் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது

மூலம் - அருண.