மாணவர் தொகை 200 இலும் குறைந்த சுமார் 5000 பாடசாலைகள் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. பாடசாலைகள் ஆரம்பித்து முதல் இரண்டு நாட்களும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுவதில்லை என்பதுடன் முறையாக கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரமே ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதாக கல்வி அமைச்சின் செய\லாளர் பேராசிரியர் கபில பெரேரா 17 ஆம் திகதி தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும் மாணவர்களுக்கு எந்த விதமான பிரச்சினைகளும் ஏட்படாது என்பதுடன் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்புவது தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை என்பதாகவும் பாடசாலைகளின் கல்வி சாரா ஊழியர்கள் குறித்த தினங்களில் கட்டாயமாக சமூகமளிக்க வேண்டும் என்பதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.
பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு இன்னும் கிட்டாமையினால் தங்களது தொழிற்சங்க போரட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அதிபர்கள் ஆசிரியர்கள் 21 ஆம் திகதி கடமைக்குச் செல்வதில்லை என்பதாகவும் அதிபர்கள் மற்றும் ஆசியர் தொழிற்சங்கள் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது
மூலம் - அருண.