ad

21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பித்தாலும் அதிபர்கள் சமூகமளிப்பதில்லை.


இந்த மாதம் 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் அதிபர்கள் சேவைக்கு சமூகமளிப்பதில்லை என்பதாக இலங்கை அதிபர்கள் சங்கம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. 

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு இதுவரையில் தீர்வு கிடைக்காமையினால் மேற்படி தீர்மானத்திற்கு வந்ததாக இலங்கை அதிபர்கள் சம்கத்தின் செயலாளர் பியசிரி பிரனாந்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 


தேசியப் பாடசாலைகள் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் பணிபுரிகின்ற இலங்கை அதிபர் சேவையில் உள்ள அதிபர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் ஆகியோர் சேவைக்கு சமூகமளிக்காமல் இருப்பதற்கான மேற்படி தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

-லங்காதீப-