வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம் 2020
2020 ஆம் ஆண்டு வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தின் கீழ் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு பொறுத்தமான நிறுவனங்களில் வெற்றிடங்களை இனங்கண்டு அதன் அடிப்படையில் விரைவாக சேவையினை நிரந்தரமாக்கவேண்டும் என்பதாக 2021.09.13 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரையில் குறித்த பயிலுனர் பட்டதாரிகளின் பயிற்சிக்காலத்தினை 2021.12.31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்தது.
அதன் அடிப்படையில் ஒரு வருட பயிற்சிக் காலத்தைப் பூர்த்தி செய்துள்ள பயிலனர் பட்டதாரிகளின் பயிற்சிக்காலம் 2021.12.31 வரையில் நீடிக்கபடுவதுடன் அவர்களுக்கான பயிற்சிக் காலக் கொடுப்பனவுகளையும் வழங்குமாறும் அதற்கான ஒதுக்கீடுகள் அமைச்சினால் வழங்கப்படும் என்பதாகவும் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின செயலாளர் அனை்து மாவட்டச் செயலாளர்களுக்கும் பிரதேச செயலார்களுக்கும் 2021.09.17 ஆம் திகதியிடப்பட்ட சுற்றுநிருபம் ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.