அகில இலங்கை பாடசாலைகளுக்கான கட்டுரைப்போட்டி - 2021
"NutriESSAY" இலங்கை போசணையாளர் சங்கத்தின் 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு இலங்கை போசணையாளர் சங்கமும் கல்வி அமைச்சும் இணைந்து நடாத்துகின்றது இப்போட்டியின் நோக்கமானது. மாணவர்களிற்கு ஆரோக்கியமான உணவு பழக்கத்தை தாண்டுவதன்மூலம் அவர்களின் உடலாரோக்கியத்தை மேம்படுத்துவதாகும்
கருப்பொருள்: சமூகத்தின் நல்வாழ்வுக்கு ஊட்டச்சத்தின் பங்களிப்பு
இந்த போட்டியானது மாணவர்களிடையே பின்வரும் பிரிவுகளில் நடாத்தப்படுகின்றது.
பிரவு 1: தரம் 5 -7 -ஆகக்குறைந்த சொற்கள் 200
பிரிவு 2 : தரம் 8-10 -ஆகக்குறைந்த சொற்கள் 300
பிரிவு 3 11-13 -ஆகக்குறைந்த சொற்கள் 500
வெற்றிபெற்றோர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுப்பொதிகளும் வழங்கப்படும்
ஒவ்வொரு பிரிவுகளுக்கும் 1ம், 2ம், 3ம் இடங்களும் 10 சாதாரண இடங்களும் தெரிப்பு செய்யப்படும்
வெற்றிபெற்ற கட்டுரைகள் இலங்கை போசணையாளர் சங்கத்தின் வலைத்தளத்தில் முகப்புத்தகத்தில் மற்றும் செய்திமடலிடம் (Newsletter) பிரசுரிக்கப்படும்
போட்டிக்கான அறிவுறுத்தல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:
* அனைத்து கட்டுரைகளும் "சமூகத்தின் நல்வாழ்வுக்கு ஊட்டச் சத்தின் பங்களிப்பு" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
அனைத்து கட்டுரைகளும் கைப்பட எழுதியிருக்க வேண்டும்.
* கட்டுரையின் பின்புறத்தில் பின்வரும் விபரங்கள் காணப்பட வேண்டும்:
- முழுப்பெயர்,
- பிறந்த திகதி,
- உங்கள் வீட்டுமுகவரி,
- தொலைபேசி இலக்கம்,
- பிரிவு,
- பாடசாலை மற்றும் தரம்,
- கட்டுரை உங்களுடையது என்பதை பெற்றோர், ஆசிரியர் பாடசாலை அதிபர் உறுதிப்படுத்த வேண்டும்,
- இப்போட்டி சிங்களால், தமிழ், மற்றும் ஆங்கில மொழிகளில் நடாத்தப்படுகின்றது.
- கட்டுரையின் ஸ்கேன்' செய்யப்பட்ட பிரதி (scannd copy) அல்லது வாசிக்கக்கூடிய அடிப்படையிலான போட்டோப் பிரதி அத்துடன் பின்புறத்தில் எழுதப்பட்ட விபரங்களையும் செப்தெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர்திகரிப்யோ
nsslessay2021@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 0714815395 என்ற whatsapp இலக்கத்துக்கு அனுப்பவும்
- மேலதிக விபரங்களுக்கு
Dr. துஷாரி பண்டார, உறுப்பினர், இலங்கை போசணையார் சங்கம் (தொலைபேசி 0714815395/ whatsapp- 0714815395) தொடர்பு கொள்ளவும்
அனுசரணை: Atlas Company Pvt Ltd)