இலங்கையில் பாடசாலைக் கல்வி தொடர்பான தொலைக்கல்வி
சுற்றுநிருபம் மற்றும் வழிகாட்டலினை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.
அதன் சுருக்கம் வருமாறு
01. நோக்கம்
நாட்டில் அனைவருக்கும் தொலைபேசி கணனி வசதிகள் இல்லாமையினால் அனைவருக்கும் கல்வி சென்றடைவதற்கான பொறிமுறை ஒன்றினை உருவாக்குதல்
02. குறிக்ககோள்கள்
- சாதாரண நிலைமையின் கீழ் பாடசாலைக் கல்வி தரப்பினர்களினால் செயல்படுத்தப்படுகின்ற பல்வேறு தொலைக்கல்வி அணுகுமுறைகளை ஒரு முறையான பொறிமுறைக்கு மாற்றியமைத்தல்
- பல்வேறு காரணங்களால் கற்றல் கற்பித்தல் செயல்முறையை விட்டு வெளியேறும் மாணவர்களை துல்லியமாக அடையாளம் காண, மாற்று அணுகுமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அந்த மாணவர்களை இந்த செயல்பாட்டில் தக்கவைத்துக் கொள்ளல்.
- முந்தைய பொதுக் கல்வி செயல்பாட்டின் பல்வேறு மட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அனைத்து தரப்பினரை புதிய பொதுவான முறைக்கு மாற்றியமைத்தல்
- தோன்றும் எந்தவொரு சவாலின் முன்னிலையில் பொதுக்கல்வியை தொடர்ச்சியாக பேணுவதற்கு ஒரு நிலையான மற்றும் நிரந்தர முறைமையொன்றை கட்டியெழுப்புதல்
03.வழிகாட்டல்
இந்த வழிகாட்டலை செயல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக பிரதேசத்தின் சுகாதார அதிகாரிகளின் அனுமதியின் கீழ், நிலவும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பொருத்தமான விதத்தில் பகுதி அடிப்படையில், (வகுப்பு, பிரிவு அல்லது பாடமாக) ஆசிரியர்களை பாடசாலைக்கு வரவழைத்து அல்லது தொலைபேசி உரையாடல்களின் (conference call) மூலமாக அல்லது மெய்நிகர் கூட்டங்கள் அல்லது வேறு சமூகவலை தொடர்பாடல் முறைகளை பயன்படுத்தி அல்லது ஒழுங்கமைத்துக்கொள்ள வேண்டும்.
பெற்றோரும் இணைத்துக்கொள்ளப்படுவதுடன் இந்தப் பொறிமுறையிலிருந்து மாணவர்கள் வௌியாகாமல் பார்க்கவேண்டும்.
என்பதாக அலேசனை தரப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது பயன்படுத்தப்படும் கற்பித்தல் முறைகள் குறித்து கீழ்வரும் விதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈ-தக்ஸலாவ”
தொலைக்கல்வி முறைமை, இணையவழி ஊடாக செயல்படுத்தக் கூடிய தேசிய செயற்றிட்டம், ஈ-தக்ஸலாவ” கற்றல் முகாமைத்துவ முறையாகும். இந்த முறைமைக்குள் தரம் 1 முதல் 13 வரையில் சிங்களம் மற்றும் தமிழ் போன்ற இரு மொழி மூலங்களிலும் பாட உள்ளடக்கங்கள் சேர்க்கப்படும். ஏலவே தரம் 1 முதல் 5 வரையில் கணிதம், சுற்றாடல்கல்வி மற்றும் தாய்மொழி போன்ற பாடங்களில் தயாரிக்கப்பட்டு அதிகமான பாட உள்ளடக்கங்கள் சேர்க்கப்படுகின்றன. 06 முதல் 11 ஆம் தரங்களில் முக்கிய பாடங்களுக்கான உள்ளடக்கங்கள் மற்றும் 12 மற்றும் 13 தரங்களுக்கான பாட உள்ளடக்கங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளடக்கப்பட்டுள்ளன.
குருகெதர
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ''ஐ" மற்றும் “நேத்ரா" அலைவரிசைகளின் ஊடாக நாள் ஒன்றுக்கு 16 மணிநேரங்கள். சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலங்கள் ஊடாக ஒரு மொழிமூலத்தில் 36 பாடங்கள் என்ற ரீதியில் ஒளிபரப்பப்படுகின்றன.
இந்த செயற்றிட்டத்திற்காக புதிதாக சேர்க்கப்படும் விடயங்களுக்குரிய பாடங்கள் மற்றும் அதன் பிரகாரம் இற்றைப்படுத்துவதற்கு ஏதுவாக தயாரிக்கப்படுகின்ற நேர அட்டவணைகள், கல்வி அமைச்சின் வலைத்தளத்திற்கு
வானொலி கல்வி நிகழ்ச்சிகள்
ருஹணு வானொலி சேவை -தென் மாகாணம்
ஊவா சமூக வானொலி சேவை - ஊவா மாகாணம்
இரஜரட்ட வானொலி சேவை - வடமத்திய மாகாணம்
கந்துரட்ட வானொலி சேவை - மத்திய மாகாணம்
ஆகிய சேவைகளில் இடம்பெறுகின்றன.
இதற்கு மேலதிகமாக மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் மற்றும் வலய மட்டத்தில் கற்றல் உள்ளடக்கங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதுடன் அவற்றின் இணைப்புகள் சில கீழே தரப்பட்டுள்ளன.
சப்ரகமுவ https://enenapiyasa.lk/
வடமேல் https://nwpedu.lk/
வடமத்திய http://www.edncp.lk/
வடக்கு http://www.edudept.np.gov.lk/, LMDM (Youtube Channel)
மேற்படி அனைத்து வலைத்தளங்களிலும் பண்புத்தரத்துடன் கூடிய மிகப் பெரிதான உள்ளடக்கங்கள் உள்ளதால் அவற்றையும் பரிசீலனை செய்வது முக்கியமாகும் என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இணையத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான ஆலோசனைகளும் அவற்றுக்கான வழகாட்டல் குறிப்புகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அது மா்திரமன்றி இந்த செயற்பாட்டில் ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகளின் பணிகளும் பெற்றோர்களின் பணிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
45 பக்கங்கள் கொண்ட வழிகாட்டல் கைநூலை கீழே காணலாம்..