ad

பஸ் நடத்துனர்களுக்குப் பதிலாக ஆசிரியர்களைப் பயன்படுத்த நடவடிக்கை



பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக விசேட பஸ் சேவை அமைக்கப்படுகின்றது. 

ஆரம்ப நிலை மற்றும் முன் பள்ளி மாணவர்களின் போக்குவரத்துக்காக விசேட போக்கு வரத்து சேவை ஒன்றினை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக போக்கு வரத்துத் துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம  தெரிவித்தார். 

நேற்று (24)  கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

பாடசாலைகள் திரும்ப ஆரம்பித்ததன் பின்னர் இந்த புதிய போக்கு வரத்து சேவை அமுல்படுத்தப்படுப்படுவதுடன் இங்கு பஸ் நடத்துனர்களுக்குப் பதிலாக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திய அடிப்படையில் இந்தப் போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்பதாக அவர் மேலும் தெரிவித்தார். 

SOURCE : ARUNA.LK