ad

பாடசாலை மாணவர்களுக்கான உலர் உணவு வழங்கும் திட்டத்ததை அமைச்சரவை நிராகரித்தது.



பாடசாலைகளில் மதிய உணவு பெற்றுக்கொள்வதற்கு தகுதி பெற்றிருந்த 12 இலட்சம் மாணவர்களுக்கு இந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு வழங்குகின்ற பகல் உணவுக்குப் பதிலாக உலர் உணவுப் பொதி ஒன்றினை வழங்குவதற்கு கல்வி அமைச்சு முன்வைத்த முன்மொழிவினை அமைச்சரவை நிராகரித்துள்ளது.

இவ்வாறு உணவுப் பொதி வழங்குவதை விட பாடசாலை ஆரம்பித்த பின்னர் பகல் உணவு வழங்குகின்ற திட்டத்தினை செயற்படுத்துவதே பொறுத்தமானது என்பதாக அமைச்சர​வை தீர்மானித்திருக்கின்றது. 

எனினும் கொவிட் நோய்ப் பரவல் காரணமாக பாடசாலைகளை மூடுவதற்கான நிலை ஏற்பட்டதனால் வழமையான அடிப்படையில் பகலுணவு வழங்கும் திட்டத்தினை செயற்படுத்த முடியாமல் போனது. எனினும் முதலாவது மற்றும் இரண்டாது கொவிட் அலைகளின் போது குறித்த மாணவர்களின் வீடுகளுக்கு 1000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதி ஒன்றினை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தது. வலயக்கல்வி உத்தியோகதத்ரகள், கோட்டக் கல்வி உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களின் உதவியுடன் குறித்த உலர் உணவுப் பொதிகள் மாணவர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்டது.  குறித்த திட்டத்தை இந்தமுறையும் செயற்படுத்துவதற்கே கல்வி அமைச்சு அமைச்சரவையின் அனுமதியினைக் கோரியிருந்தது.  

அதற்கான அனுமதி அமைச்சரவையில் இருந்து கிடைக்காமையினால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முன்னர் போன்றே பகல் உணவு வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படும் என்பதாக அமைச்சரவை உத்தியோகத்தர் ஒருவர் அருண செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தார். 

நிலந்த மதுராவல (அருண இணையத்தளம்)