கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்து சிகிச்சை பெறுகின்ற அக்ரஹார அங்கத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக சமூக ஊடகங்களில் பரவுகின்ற செய்தி தங்களது நிறுவனத்தினால் வௌியிடப்பட்டதல்ல என்பதுடன் அது பொய்யான செய்தியாகும் என்பதாக அக்ரஹார நிறுவனம் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கினறது.
அத்துடன் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்ற அக்ரஹார அங்கத்தவர்களுக்கு இழப்பீடுகள் ஏதும் வழங்கப்படுமாயின் அது குறித்த அறிவுறுத்தல்கள் அக்ரஹார நிறுவனத்தின் முகநூல் பக்கம், இணையத்தளம், வேறு ஊடகங்கள் என்பன ஊடாக அறியத்தரப்படும் என்பதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
lankajobinfo.com
அக்ரஹார நிறுவனத்தின் முகநூல் பக்கம்