2021.06.04 ஆம் திகதி வர்த்தமான அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங் கோரல் குறித்த அறிவித்தலில் கீழ் குறிப்பிடப்படும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
01. கல்வி நிர்வாக சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலும் சேவை மூப்பு அடிப்படையிலுமான போட்டிப் பரீட்சைக்கு ஒருவர் தோற்ற முடியுமான தடவைகள் 1928/28 ஆம் இலங்க சேவைப்பிரமாணக்கூற்று வௌியிடப்பட்ட 2015.08.21 ஆம் திகதி இலிருந்தே கணிக்கப்படும்.
02. விண்ணப்பம் ஏற்கப்படும் இறுதித் திகதி 2021.09.03 ஆகும்
03. அனைத்து தகைமைகளும் 2021.07.30 திகதிக்கு பெற்றிருக்க வேண்டும்.
04.2021.07.30 அல்லது அதற்கு முன்னர் விண்ணப்ம் சமர்ப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பம் சமர்ப்பிக்கத் தேவையில்லை
மேற்படி திருத்தங்களுக்கு மெலதிகமாக கல்வி நிர்வாக சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை தொடர்பில் கீழ்வரும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன
ஆலேசனையும் வழிகாட்டலும் பாடம் தொடர்பான வெற்றிடங்களுக்கு கல்வித் தகைமையாக ஏதேனும் ஒரு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பெற்றுக்கொண்ட உளவியல் பட்டம் பெற்றிருத்தல் அல்லது பட்டத்துக்குரிய பாடங்களில் 1/3 பகுதி உளவியல் சார்ந்ததாக இருக்கும் பட்டம் குறிப்பிட்ப்படுகின்றது.
அடுத்து விசேட தரத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் குறித்த பிரிவிற்கான கல்வித் தகைமைகளில் ஒன்றைப் பூர்த்திசெய்திருக்கவேண்டும் அல்லது 4.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள தகைமையினைப் பூர்த்திசெய்திருக்கவேண்டும்
என்பதாக திருத்தப்பட்டிருக்கின்றது.
மூலம் வர்த்தமானி அறிவித்தல் 2021.08.20